NEW
Font size
Worksheetsதமிழ்மொழி
Total questions: 30
Worksheet time: 30mins
பனிக்கூழ் வியாபாரியைக் கண்ட சிறுவர்கள் ______________________ என அவரை நோக்கி ஓடினர்
சல சல
குடு குடு
கிலு கிலு
கல கல
பின்வரும் கூற்றுக்கு ஏற்ற மரபுத்தொடரைத் தேர்வு செய்க.
எல்லாவற்றையும் எல்லாரிடமும் எளிதாகச் செல்லிவிடுகிற இயல்வு உள்ள் ஒரு நபர்.
கிணற்றுத் தவளை
நாக்கு நீளுதல்
அவசரக் குடுக்கை
ஓட்டை வாய்
கீழ்காணும் விளக்கத்திற்கு ஏற்ற பழமொழி யாது?
நாம் வாழும் இடத்து மக்களின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப அவர்களோடு இணைந்து வாழ வேண்டும்.
ஊருடன் கூடி வாழ்
ஒற்றுமையே பலம்
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
தனிமரம் தோப்பாகாது
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு
என்ற திருக்குறள் அடிகள் உணர்த்தும் பழமொழி யாது?
தனிமரம் தோப்பாகாது
அன்பான நண்பனை ஆபத்தில் அறி
ஒற்றுமையே பலம
உப்பிட்டவரை உள்ளளவும் நினை
கீழ்க்காணும் பொருளுக்கு ஏற்ற கொன்றை வேந்தனைத் தெரிவு செய்க.
பிறருடைய குறைகளையும் குற்றங்களையும் பெரிதுப்படுத்திக் கொண்டிருந்தால் நம்முடன் உறவினர்களோ நண்பர்களோ யாரும் இருக்க மாட்டார்கள்.
சூதும் வாதும் வேதனை செய்யும்
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
ஏவா மக்கள் மூவா மருந்து
நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக
கொடுக்கப்பட்ட கொன்றை வேந்தனுக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
தாயும் தந்தையுமே நாம் அறிந்து கொள்ள வேண்டிய தெய்வம் ஆவார்.
தந்தையின் சொல்லைவிட மேலான அறிவுரை கிடையாது
தாயும் தந்தையுமே நாம் அறிந்து கொள்ள வேண்டிய தெய்வம் ஆவர்
கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபடுவது மிக்க நன்மை தரும்.
முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்
மேற்காணும் குறளுக்கு ஏற்ற கொன்றை வேந்தனைத் தெரிவு செய்க.
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு
சூதும் வாதும் வேதனை செய்யும்
நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் ‘அன்னையர் தினம்’ உலகளாவிய நிலையில் கொண்டாடப்படுகிறது
மேற்காணும் கூற்றுக்கு ஏற்ற கொன்றை வேந்தனைத் தெரிவு செய்க
தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
சூதும் வாதும் வேதனை செய்யும்
கருத்துக்குப் பொருத்தமான செய்யுளைத் தெரிவு செய்க
சூதாடுதலும் தேவையற்ற வாக்குவாதம்
செய்தலும் துன்பத்தையே தரும்
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
சூதும் வாதும் வேதனை செய்யும்
ஏவா மக்கள் மூவா மருந்து
ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு
தமிழ்மொழியில் மொத்தம் எத்தனை எழுத்துகள் உள்ளன?
47
147
247
347
உயிரெழுத்துகள் மொத்தம் எத்தனை?
8
12
16
20
மெய்யெழுத்துகள் எத்தனை?
12
14
16
18
மெய்யெழுத்துகள் யாவை?
வல்லினம், மெல்லினம், குறிலினம்
இடையினம், மெல்லினம், வல்லினம்
வல்லினம், இடையினம், குறிலினம்
மெல்லினம், இடையினம், குறிலினம்
சரியானதைத் தேர்ந்தெடுக.
க் + அ = அ
க் + ஆ = ஆ
அ + க் = க்
க் + அ = க
உயிர்மெய்க்குறில் எழுத்துகள் எத்தனை?
80
90
100
110
உயிர்மெய்நெடில் எழுத்துகள் எத்தனை?
126
128
130
132
பின்வருவனவற்றுள் எஃது இனவெழுத்து அல்ல.
தங்கம்
உணவு
கன்று
அம்பு
சுட்டெழுத்து எத்தனை வகைப்படும்?
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
மருத்துவர் என்பது என்ன வகைப் பெயர்ச்சொல்?
பொருட்பெயர்
சினைப்பெயர்
பண்புப்பெயர்
தொழிற்பெயர்
சீப்பு, தார், குலை, குழு போன்றன என்ன வகைப்பெயர்?
பகுதிப் பெயர்
விகுதிப் பெயர்
தொகுதிப் பெயர்
தகுதிப் பெயர்
முகிலன்பால் அன்பு கொள்க. கோடிட்ட சொல் எந்த வேற்றுமையை ஏற்று வந்துள்ளது?
இரண்டாம் வேற்றுமை
நான்காம் வேற்றுமை
ஐந்தாம் வேற்றுமை
ஏழாம் வேற்றுமை
என்ன வகைப் பெயர்?
பொருட்பெயர்
சினைப் பெயர்
பண்புப்பெயர்
காலப்பெயர்
பின்வருவனவற்றுள் ஒன்றன்பால் சொல்லைத் தெரிவு செய்க.
மாணவர்கள்
மகிழுந்து
நெகிழிகள்
குழந்தைகள்
கீழ்க்காணும் வாக்கியத்தில் ஆண்பாலைக் குறிக்கும் விடையைத் தேர்ந்தெடுக.
வனவிலங்கு அதிகாரியான நக்கீரன், ஊர் மக்களிடம் சிங்கம், புலி போன்ற மிருகங்களை வேட்டையாடுவது சட்டத்திற்குப் புறம்பானதென்று எச்சரித்தார்.
நக்கீரன்
மிருகங்களை
மக்களிடம்
புலி
கீழ்க்காணும் வாக்கியத்தில் காணப்படும் ஆண்பாலுக்கு ஏற்ற பெண்பாலைத் தேர்ந்தெடுக.
குயவன் _________-திற்காக வீட்டில் நெடு நேரம் காத்திருந்தான்.
குரத்தி
குயத்தி
குவத்தி
குலத்தி
பின்வருவனவற்றுள் பலவின்பாலைக் குறிக்கும் படத்தைத் தெரிவு செய்க.
கீழ்க்கண்ட வாக்கியங்களில் சரியான பலர்பால் பயன்பாட்டைக் கொண்ட வாக்கியத்தைக் கண்டெடுக.
வானில் குருவிகள் பறந்தன
சரவணன் வேகமாக ஓடினான்.
மலேசியா மக்கள் நாட்டுப்பற்று மிக்கவர்கள்.
ஆற்றில் மீன்கள் அங்கும் இங்கும் நீந்துகின்றன.
பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தரைமட்டத்தில் இருந்து 450 அடி உயரத்தில் உள்ளது; ஆரம்பகாலத்தில் பக்தர்கள் மலை மீது அமைந்துள்ள இந்த கோயிலுக்கு சுவாமியை தரிசனம் செய்ய படிப்பாதை வழியாக சென்றனர்.
மேலே உள்ள உரைநடையிலுள்ள பலர்பாலை அடையாளம் காண்க.
பழநி
தண்டாயுதபாணி
சுவாமி
பக்தர்கள்
கீழ்க்காணும் வாக்கியங்களில் ஒன்றன்பால் வாக்கியத்தைத் தெரிவு செய்க.
சிறுவர்கள் உரக்க வாசித்தனர்.
இராமனின் கதையைக் கேட்ட சீடர்கள் மனமுருகி நின்றனர்.
காளை மாடு வயலை உழுதது.
மாணவ மணிகள் தேசிய கீதத்தைப் பாடி மகிழ்ந்தனர்.
சரியான ஆண்பாலுக்கு ஏற்ற பெண்பாலைக் கொண்ட சொற்றொடரைத் தேர்ந்தெடுக்கவும்.
தாத்தா தம்பியிடன் கடைக்குச் சென்றார்.
சிறுவர்கள் இரு குழுவாக திடலில் பந்து விளையாடினர்.
அப்பாவும் அம்மாவும் கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபட்டனர்.
மானவர்கள் சிற்றுண்டியில் வரிசையாக நின்று உணவு வாங்கினர்.
