wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கண்டுபிடி!கண்டுபிடி! 4 (ஆண்டு 4,5,6)

Total questions: 20

Worksheet time: 12mins

Name
Class
Date
1.

வட்டமாய் இருந்திடுவேன். உண்ணுவதற்கு என்னை வாங்குவர். யாரும் உண்ணுவதில்லை________

a)

தட்டு

b)

அப்பளம்

c)

லட்டு

d)

பந்து

2.

நீ பார்த்தால் நானும் பார்ப்பேன் நீ செய்தால் நானும் செய்வேன்________

a)

குரங்கு

b)

கண்ணாடி

c)

நாய்

d)

ஒளி

3.
அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி, பாதிநாள் குறைவாள், பாதிநாள் வளர்வாள் அது என்ன?
a)
சூரியன்
b)
நிலா
c)
பூமி
d)
சக்தி
4.

உணவை எடுப்பான் ஆனால் உண்ணமாட்டான் அவன் யார்?

a)

மனிதன்

b)

சட்டி

c)

அகப்பை

d)

நாய்

5.

வாயிலிருந்து நூல் போடுவான்; மந்திரவாதியும் இல்லை, கிளைக்குக் கிளை தாவுவான்; குரங்கும் இல்லை, வலைவிரித்துப் பதுங்கியிருப்பான்; வேடனும் இல்லை – அவன் யார்?

a)

நூல்

b)

பட்டாம்பூச்சி

c)

பட்டுப்புழு

d)

சிலந்தி

6.

ஒட்டிப்பிறந்த இரட்டைப் பிறவிகள் வெட்டிப்போடுவதில் கெட்டிக்காரர்கள்.

அது என்ன?

a)

கத்திரிக்கோல்

b)

கத்தி

c)

தோழன்

d)

பகைவர்

7.

ஓடியாடி வேலை செய்தபின் மூலையில் ஒதுங்கிக்கிடப்பாள் அவள் யார்?

a)

விளக்கு

b)

துடைப்பம்

c)

பேனா

d)

பாத்திரம்

8.

ஆயிரம் தச்சன் கூடி செய்த அழகான மண்டபம் ஒருவர் கண் பட்டு உடைந்ததாம். அது என்ன?

a)

குருவிக் கூடு

b)

கல்

c)

பறவை கூடு

d)

தேன் கூடு

9.

உலகிலேயே மிக நீளமான நதியாகக் கருதப்பட்ட நதி யாது?

a)

வோல்கா

b)

காவிரி

c)

நைல் நதி

d)

அமேசான்

10.

பேருந்து - என்ற சொல்லுக்கு பொருத்தமான சொல்லை எழுதுக:

a)

தட....தட....

b)

பட......பட.......

c)

பாம்.... பாம்.......

11.

பகைவர் - என்ற சொல்லின் எதிர்ச்சொல் என்ன?

a)

தோழர்

b)

நண்பர்

c)

உறவினர்

12.

உடுத்தும் உடைகள் - பொருத்தமான சொல்லை எழுதுக:

a)

சுருட்ட லாம்

b)

மடிக்கலாம்

c)

வீசலாம்

13.

மரக் கிளையே தலையில் இருந்தாலும்

மனம் கலங்கித் திரிவான் காட்டுக்குள்.

அவன் யார்?

a)

புலி

b)

யானை

c)

காண்டாமிருகம்

d)

மான்

14.

சாத்திய கதவிருக்க, ஏற்றிய விளக்கிருக்க,

இரவில் வந்தது யார்? இரத்தத்தைக்

குடித்தது யார்?

a)

திருடன்

b)

கொசு

c)

d)

எறும்பு

15.

வகை வகையாய் தெரியும் வண்ணப்படம், கண்மூடிக் காணும் காட்சிப்படம் – அது என்ன?

a)

சினிமா

b)

நாடகம்

c)

மழை

d)

கனவு

16.

கையளவு உடம்புக்காரன், காவலுக்கு கெட்டிக்காரன் – அவன் யார்?

a)

காவல்காரன்

b)

பூட்டு

c)

சாவி

d)

காவல் அதிகாரி

17.

கருப்பன் தண்ணீரில் குளித்து வெள்ளையனாவான், வெள்ளையன் பிறகு விருந்தாவான் – அவன் யார்?

a)

இறால்

b)

உளுத்தம் பருப்பு

c)

சீனி

d)

உப்பு

18.

கண்டு பிடித்தவனும் வைத்திருக்கவில்லை, வாங்கியவனும் உபயோகிக்கவில்லை, உபயோகிப்பவனுக்கு அதனைப் பற்றி எதுவும் தெரியாது அது என்ன?

a)

புத்தகம்

b)

அலமாரி

c)

மிதிவண்டி

d)

சவப்பெட்டி

19.

தாளைக் கொடுத்தால் தின்னும்; தண்ணீர் குடித்தால் மடியும் - அது என்ன?

a)

நெருப்பு

b)

நீர்

c)

இயந்திரம்

d)

புகை

20.

வண்ணான் வெளுக்காத வெள்ளை, குயவன் பண்ணாத பாண்டம், மழை பெய்யாத தண்ணீர் - அது என்ன?

a)

பானை

b)

தேங்காய்

c)

சட்டி

d)

காகிதம்