wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

செய்யுள் படி 4 & 5

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இச்செய்யுளடிகளின் விளக்கம் என்ன?


பயில்சிறை அரச அன்னம்

பன்மலர் பள்ளி நின்றும்

a)

குயிலினம் தன் இணைகளோடு சேர்ந்து இருக்கவும்

b)

நெருங்கிய சிறகுகளையுடைய அன்னப்பறவையானது

c)

நெருங்கிய சிறகுகளையுடைய அன்னப்பறவையானது

தாமரை மலர்கனின்றும்

d)

துயில் எழவும் அக்காலை வேலையில்

வண்டுகள் உதயராகம் பாடவும் உடைய சோலை.

2.

யாதும் ஊரே யாவரும் கேளிர்


இவ்வடிகளின் பொருள் என்ன?

a)

எல்லா ஊரும் எமக்குச் சொந்தமான ஊரே, இதை அனைவரும் கேளுங்கள்

b)

எல்லா ஊர்மக்களும் எமக்கு உதவி செய்தவர்களே

c)

ஊர்மக்கள் அனைவரும் உறவுக்காரர்போல் இருந்து எனக்கு உதவி செய்தார்கள்

d)

எல்லா ஊரும் எமக்குச் சொந்தமான ஊரே.

எல்லாரும் எம் சுற்றத்தார்களே

3.

ஒன்றறி வதுவே உற்றறி வதுவே - இதன் பொருள் என்ன?

a)

ஓரறிவு பெற்ற உயிர் எனபது உற்று அறியும் இயல்பு உடையது

b)

ஓரறிவு பெற்ற உயிர் எனபது உடம்பினால் அறியும் இயல்பு உடையது

c)

ஓரறிவவு உயிர் என்றால் மனத்தின் வழி அறிந்து கொள்ளும் இயல்பு கொண்டதாகும்.

d)

ஓரறிவு என்பது உயிரில்லாத பொருள்களுக்கு மட்டுமே எனத் தொல்காப்பியர் கூறுகிறார்.

4.

துயிழெல, தும்பி காலை

செவ்வழி முரல்வ சோலை


இந்த அடிகளுக்கான விளக்கம் என்ன?

a)

துயிழெலவும் அக்காலை வேளையில் வண்டுகள் உதயராகம் பாடவும் உடைய சோலை

b)

துயிழெலாமல் இருக்க, அக்காலை வேளையில் வண்டுகள் உதயராகம் பாடவும் உடைய சோலை

c)

துயிழெலவும் ஆடிப் பாடவும் அக்காலை வேளையில் வண்டுகள் உதயராகம் பாடவும் உடைய சோலை

d)

துயிழெலவும் அக்காலை வேளையில் வண்டுகள் உதயராகம் பாடவும் அழகான காட்சியைக் கொண்ட சோலை

5.

பின்வரும் செய்யுளடிகளின் பொருள் என்ன?


சீத மதிக்குடைக்கிழ்ச் செம்மை அறங்கிடப்பத்

தாதவிழ்பூந் தாரான் தனிக்காத்தான்

a)

குளிர்ந்த நிலவு போன்ற வெண்கொற்றக் குடைநிழலில் வீற்றிருக்கின்றான் நளமன்னன்.

b)

குளிர்ந்த நிலவு போன்ற வெண்கொற்றக் குடைநிழலில் வீற்றிருக்கின்ற நளமன்னன் தன் நாட்டைத் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாமல் ஆண்டு வந்தான்.

c)

குளிர்ந்த நிலவு போன்ற வெண்கொற்றக் குடைநிழலில் வீற்றிருக்கின்ற நளமன்னன் மகரந்தப்பொடி சிந்துகின்ற மலர்மாலையை அணிந்தவன்.

d)

குளிர்ந்த நிலவு போன்ற வெண்கொற்றக் குடைநிழலில் வீற்றிருக்கின்ற நளமன்னன் மகரந்தப்பொடி சிந்துகின்ற மலர்மாலையை அணிந்தவன். அவன் சிறந்த அறங்கள் நிலைத்து நிற்கும் வகையில் தன் நாட்டைத் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாமல் ஆண்டு வந்தான்.

6.

நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று;

நீரினும் ஆர் அளவின்றே


இவ்வடிகளின் பொருள்?

a)

அவனுடன் நான் கொண்ட அன்பானது இந்த பிரபஞ்சத்தைவிடப் பெரியது; வானத்தைவிட உயர்ந்தது; கலடைவிட ஆழமானது

b)

அவனுடன் நான் கொண்ட அன்பானது பூமியைவிடப் பெரியது; வானத்தைவிட உயர்ந்தது; கலடைவிட ஆழமானது

c)

அவனுடன் நான் கொண்ட அன்பானது பூமியைவிடப் பெரியது; வானத்தைவிட உயர்ந்தது; நீரைவிட ஆழமானது

d)

அவனுடன் நான் கொண்ட அன்பானது பூமியைவிடப் பெரியது; வானத்தைவிட உயர்ந்தது அன்று; கலடைவிட ஆழமானது

7.

கடுங்கதிர் வெம்மையில் காதலன் தனக்கு


இவ்வடிகளின் சரியான விளக்கத்தைத் தெரிவு செய்க

a)

கடுங்கதிர் வெயிலால் நடுங்கத்தக்க துயரத்தை அடைந்து

b)

கடுங்கதிர் வெயிலால் நடுங்கிப்போய்ப் பெரிய துயரத்தை அடைந்து

c)

தன் கணவன் பொருட்டு, கடுங்கதிர் வெயிலால் நடுங்கத்தக்க துயரத்தை அடைந்து

d)

கடுங்கதிர் வெயிலால் நடுங்கத்தக்க துயரத்தை அடைந்து போதிலும் எதற்கும் கவலைபடாமல்

8.

...மாட்சியின்

பெரியோரை வியத்தலும் இழமே

சிறியோரை இகழ்தல் அதனிலும் இழமே

a)

சிறப்புடைய பெருமை விளங்கும் மாந்தரைக் கண்டு பாராட்டுதலும் இல்லை

b)

சிறப்புடைய பெருமை விளங்கும் மாந்தரைக் கண்டு பாராட்டுதலும் இல்லை; சிறுமையுடையோராய்த் தூற்றுதலும் இல்லை

c)

சிறப்புடைய பெருமை விளங்கும் மாந்தரைக் கண்டு பாராட்டுதலும் இல்லை; சிறுமையுடையோராய்த் தாழ்ந்து அழிபவர்களைக் கண்டு இகழ்ந்து தூற்றுதலும் இல்லை

d)

சிறப்புடைய பெருமை விளங்கும் பெரியவரைக் கண்டு பாராட்டுதலும் இல்லை; சிறுமையுடையோராய்த் தாழ்ந்து அழிந்து போகும் சிறியோர்களைக் கண்டு இகழ்ந்து தூற்றுதலும் இல்லை

9.

நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே-

இவ்வடியின் பொருள் என்ன?

a)

மரபுகளை நேர்மை பெற உணர்ந்து நெறிப்படுத்த வேண்டும்.

b)

மரபுகளை நேர்மை பெற உணர்ந்து நெறிப்படுத்த தவறிவிட்டனர்.

c)

மரபுகளை நேர்மை பெற உணர்ந்தவர்கள் நெறிப்படுத்தியுள்ளனர்.

d)

மரபுகளை நேர்மை பெற உணராதவர்களுக்கு நெறிப்படுத்தியுள்ளனர்.

10.

பின்வரும் செய்யுளடியின் விளக்கம் என்ன?


ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே

a)

ஐந்தறிவு பெற்ற உயிர் என்பது செவியால் அறிவது

b)

ஐந்தறிவு பெற்ற உயிர் என்பது எல்லாவற்றுக்கும் செவிசாய்த்து வாழ்வது.

c)

ஐந்தறிவு உயிர் என்பது உடம்பினாலும் வாயினாலும் மூக்கினாலும் செவியினாலும் மனத்தாலும் அறியும் இயல்பு உடையது

d)

ஐந்தறிவு பெற்ற உயிர் என்பது உடம்பினாலும் வாயினாலும் மூக்கினாலும் கண்ணாலும் செவியினாலும் அறியும் இயல்பு உடையது