wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பழமொழி 2

Total questions: 12

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

1. வியாபாரத் துறையில் ஈடுபட எண்ணம் கொண்டிருந்த அறிவுமதி அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு தோல்விக் கண்டாலும் மனவுறுதியோடு போராடினான்.

a)

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

b)

சுடர் விளக்காயினும் தூண்டுக்கோல் தேவை

c)

முன் வைத்த காலைப் பின் வைக்காதே

2.

உடல் நலத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். வேளை தவறாமல் உண்ண வேண்டும். உடல் வலிமையாக இருந்தால்தானே உழைக்க முடியும்; நினைத்ததைச் சாதிக்க முடியும்.

a)

முன் வைத்த காலைப் பின் வைக்காதே

b)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

c)

சுவரை வைத்துதான் சித்திரம் வரைய வேண்டும்

3.

குமணனின் அறிவுத்திறன் மேலும் சிறந்து விளங்க அவனின் ஆசிரியர்கள் அடிக்கடி பாராட்டினர்;அவன் பேசும் கூட்டங்களுக்குச் சென்று அவனின் பேச்சைச் செவிமடுத்து தவறுகளைச் சுட்டிக் காட்டினர்.

a)

முன் வைத்த காலைப் பின் வைக்காதே

b)

சுடர் விளக்காயினும் தூண்டுக்கோல் தேவை

c)

சுவரை வைத்துதான் சித்திரம் வரைய வேண்டும்

4.

"காலம் நேரம் பார்க்காமல் பணம் சேர்ப்பதிலேயே குறியாக இருந்து உடல் நலத்தை வருத்திக் கொண்டாயே " என அம்மா கனிமுகனைக் கடிந்து கொண்டார்

a)

சுடர் விளக்காயினும் தூண்டுக்கோல் தேவை

b)

சுவரை வைத்துதான் சித்திரம் வரைய வேண்டும்

c)

முன் வைத்த காலைப் பின் வைக்காதே

5.

கூனி செய்த சூழ்ச்சியால் இராமன் காட்டிற்கு அனுப்பப்பட்டான். இதனை அறியாத மக்கள் தசரதனையே தூற்றினர்.

a)

முன் வைத்த காலைப் பின் வைக்காதே

b)

எய்தவன் இருக்க அம்பை நோவானேன்

c)

ஆழம் அறியாமல் காலை விடாதே

6.

" மாணவர்களே, நாம் எந்த ஒரு செயலையும் மீண்டும் மீண்டும் செய்தால்தான் அதில் திறமையடைய முடியும் " என்றார் ஆசிரியர்.

a)

ஆழம் அறியாமல் காலை விடாதே

b)

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

c)

முன் வைத்த காலைப் பின் வைக்காதே

7.

1. சூழல் விளக்கும் பழமொழி யாது? நான் ஒரு புகழ்பெற்ற பாடகராக வர உதவி செய்த அந்தப் பெரியவரை என் உயிர் உள்ளவரை மறக்க மாட்டேன்.

a)

ஊருடன் கூடி வாழ்

b)

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

c)

உப்பிட்டவரை உள்ளளவும் நினை

8.

காவேரி தனக்குத் தெரியாத பாடங்களை ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டாள்.

a)

அழுத பிள்ளை பால் குடிக்கும்

b)

மனம் உண்டானல் மார்க்கம் உண்டு

c)

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா

9.

6. அமெரிக்கா சென்ற அரவிந்தன் அங்குள்ள மக்களுடன் ஒற்றுமையாக வாழ தொடங்கினான்.

a)

அழுத பிள்ளை பால் குடிக்கும்

b)

ஊருடன் கூடி வாழ்

c)

உப்பிட்டவரை உள்ளளவும் நினை

10.

அருணன் ஒழுங்காகப் பள்ளிக்குச் செல்வதில்லை. கூடாதவர்களோடு சுற்றி திரிந்தான்.பெரியவனானதும் பெற்றோர் திருத்த முயன்றனர். ஆனால் அவன் திருந்தவே இல்லை

a)

மனம் உண்டானல் மார்க்கம் உண்டு

b)

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா

c)

உப்பிட்டவரை உள்ளளவும் நினை

11.

விமலன் கோபத்தால் தம்பியை அடித்த செயல் அவனுக்குப் பாதகமாக அமைந்தது.

a)

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு

b)

மனம் உண்டானல் மார்க்கம் உண்டு

c)

அழுத பிள்ளை பால் குடிக்கும்

12.

எவ்வித ஆதரவுமின்றி தனிமையில் வாழும் தாய்மார்கள், மனம் தளராமல் உழைப்பே மூலதனமாகக் கொண்டு பிள்ளைகளைக் கல்வியில் முன்னேறச் செய்ய வேண்டும்.

a)

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்

b)

மனம் உண்டானால் மார்க்கம் உண்டு

c)

வெள்ளம் வருமுன் அணை போடு