wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

செய்யுள் - அன்பின் திறம் குறுந்தொகை

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

குறுந்தொகை எந்தத்தொகையில் உள்ள நூல்களுள் ஒன்று.

a)

எட்டுத்தொகை

b)

பத்துப்பாட்டு

c)

அகநானுறு

d)

புறநானுறு

2.

அன்பின் திறம் என்ற குறுந்தொகை பாடல் எந்தத் தினையைச் சார்ந்தது?

a)

முல்லை

b)

பாலை

c)

குருஞ்சி

d)

மருதம்

3.

அன்பின் அறம் என்ற குறுந்தொகை பாடலை எழுதிய ஆசிரியர் யார்?

a)

காலெறி கடிகையார்

b)

கல்பொரு சிறுநுரையார்

c)

நச்சினார்க்கினியர்

d)

தேவகுலத்தார்

4.

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று

நீரினும் ஆரளவின்றே - சாரல்

கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு

பெருந்தெனிழைக்கும் நாடனோடு நட்பே.


என்ற பாடல் எதை எடுத்துரைக்கிறது?

a)

தலைவன் தலைவியின் காதலை

b)

அன்பின் ஆழத்தையும் தலைவியின் நம்பிக்கையையும்

c)

தொழியின் நட்பையும் திறமையையும்

d)

ஆண்களின் கடமையைக் கூறுகிறது

5.

________________________________

நீரினும் ஆரளவின்றே - சாரல்

கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு

பெருந்தெனிழைக்கும் நாடனோடு நட்பே.

a)

நிலத்தினும் உயர்ந்தன்று வானினும் பெரிதே

b)

அளத்தற்கு அரிய ஆழம் உடையது

c)

தேனைத் தேடும் தும்பி-வண்டே

d)

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று

6.

கருங்கோற் என்ற சொல்லின் பொருள் என்ன?

a)

கருமையான மரத்தில்

b)

அழகான மரக்கிளையில்

c)

கரிய கிளைகளில்

d)

கருப்பான வண்டு

7.

"பெருந்தெனிழைக்கும் நாடனோடு நட்பே"

என்ற பாடல் வரியின் பொருள் என்ன?

a)

மலைச் சரிவில் உள்ள கரிய நிறமான கொம்புகளை

b)

வண்டுகள் சிறப்பான தேனைச் செய்யும் நாட்டையுடைய என் தலைவனொடு

c)

மலைப் பக்கத்தில் உள்ள, கரிய கொம்புகளை உடைய குறிஞ்சி மரம்

d)

தலைவனோடுு எனக்குடைய நட்பு, பூமியைக் காட்டிலும் பெரியது; ஆகாய

8.

மலைப் பக்கத்தில் உள்ள, கரிய கொம்புகளை உடைய குறிஞ்சி மரத்தின் மலர்களைக் கொண்டு...


என்ற பொருளைக் கொண்ட செய்யுள் வரியைத் தெரிவு செய்க.

a)

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று

b)

நீரினும் ஆரள வின்றே- சாரல்

c)

கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு

d)

பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.

9.

செய்யுளில் “சாரல்” என்ற சொல் எதனைக் குறிப்பிடுகிறது?

a)

நீர்

b)

நிலம்

c)

காட்டுப் பகுதி

d)

மலைப் பக்கம்

10.

அன்பின் அறம் என்ற பாடலில் தலைவியின் அன்பு கடலோடு எப்படி ஒப்பிட்டுக் காட்டப்பட்டது?

a)

கடலை விடப் பெரியது

b)

கடல் ஆழத்திற்குச் சமமானது

c)

பூமியைக் காட்டிலும் பெரியது

d)

கடலைக் காட்டிலும் அளக்க முடியாத ஆழம் உடையது.