wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மீள்பார்வை அறிவியல்

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.
கூற்றை வாசிக்கவும்.
நிறைய மிருகங்கள் பெரிய கூட்டமாகவும் சிறிய கூட்டமாகவும் வாழ்கின்றது, அவை நலமுடன் வாழ ஒற்றுமையாக செயல்படுகிறது.    
           
மேலே உள்ள கூற்று மிருகங்கள் கூட்டமாக வாழ்வதற்கான காரணத்தை உணர்த்துகிறது.  கீழ்காண்பவனவற்றுள் எந்த மிருகம் மேலே உள்ள கரணத்தின்படி சிறு கூட்டமாக வாழ்கின்றது.
a)
சிங்கம்
b)
வரிக் குதிரை
c)
கிளை மான்
d)
கடற்சிங்கம்
2.
பின்வருவனவற்றுள் எது உடை மாட்டியைத் துருப்பிடிப்பதலிருந்து தவிர்க்கச் சிறந்த வழியாகும்?
a)
சாயம் பூசுதல்
b)
ஈய முலாம் பூசுதல் 
c)
எண்ணெய் பூசுதல் 
d)
நெகிழி உறையிடுதல்
3.
பின்வருவனவற்றுள் எது உடை மாட்டியைத் துருப்பிடிப்பதலிருந்து தவிர்க்கச் சிறந்த வழியாகும்?
a)
சாயம் பூசுதல்
b)
ஈய முலாம் பூசுதல் 
c)
எண்ணெய் பூசுதல் 
d)
நெகிழி உறையிடுதல்
4.
இரவு பகல் ஏற்படுவதன் காரணம்...  
a)
பூமி தன் அச்சில் முழுமையாய் சுற்றிவர 24 மணி நேரம் ஆகும்.
b)
பூமி சூரியனைச் சுற்றி வருவதால் நிலவின் கலைகள் ஏற்படுகின்றன.
c)
பூமி தன் அச்சில் சுழன்று கொண்டே சூரியனைச் சுற்றி வருவதால்.
d)
நிலவு பூமியின் இயற்கைத் துணைக்கோள்.
5.
பின்வரும் நிகழ்வுகளில், எது நிலவு பூமியைச் சுற்றி வருவதால் ஏற்படுகிறது?  
a)
இரவு பகல்
b)
நிலவின் கலைகள்
c)
நிலவு பூமியின் அருகில்
d)
பூமியின் இருப்பிடத்திலிருந்து சூரியன் மற்றும் நிலவின் தூரம் ஒரே அளவில் இருப்பதால்
6.
ஏன் வண்ணத்துப்பூச்சி இலைக்கடியில் முட்டை இடுகிறது.  
a)
சூரிய ஒளியிலிருந்து தவிர்க்க
b)
பிராணிகள் சாப்பிடுவதிலிருந்து தவிர்க்க
c)
இலையிலிருந்து உணவைப் பெறுவதற்கு 
d)
அனைத்து முட்டைகளும் குஞ்சுப் பொரிப்பதை உறுதிச் செய்ய
7.
வெப்பநிலை என்றால் என்ன?    
a)
ஒரு வகை சக்தி
b)
ஒரு பொருளின் வெப்பம் மற்றும் குளிர் நிலையின் அளவு
c)
பொருளை வெப்பப்படுத்தும்போது விரிவடைதல் 
d)
பொருளை குளிர்ப்படுத்தும்போது சுருங்குதல்
8.
பின்வருவனவற்றுள் எது தரப்படுத்தப்பட்ட அளவின் பயன்பாட்டின் நோக்கமாகாது? 
a)
ஒரே அளவான முடிவைப் பெருவதற்கு
b)
ஒரு பொருளின் நீளத்தைச் சரியாக அளப்பதற்கு
c)
போட்டியின் நேரத்தை நியாயமாக அளப்பதற்கு
d)
பொருட்களை பல வடிவங்களில் பெருவதற்கு
9.
தூண்டலுக்கு ஏற்ப துலங்குதல்' என்பதன் பொருள் என்ன?  
a)
ஒரு பிரச்சனைக்குத் தீர்வு காணுதல் 
b)
உயிரினங்கள் தங்கள் இணைகளுக்கு ஏற்ப துலங்குதல்
c)
தூண்டல் ஏற்படும் போது உயிரினங்கள் துலங்குவது
d)
உயிரினங்கள் கழிவுப் பொருட்களை அகற்றுவது 
10.
காவியா சூரிய ஒளியுள்ள ஓர் இடத்தில் செடி ஒன்றை வளர்க்கவிரும்பினாள். ஆனால் மிகக்குறைந்த நீர்வளமே இருந்தது.   எந்தத் தன்மைகொண்ட செடி அவ்விடத்தில் நடுவதற்கு பொருத்தமில்லை?    
a)
நீண்ட வேர்
b)
அதிக இலைகள்
c)
சிறிய அளவைக்கொண்ட இலைகள்
d)
நீரைச் சேகரிக்கக்கூடிய தண்டு
11.

குஞ்சுகளைப் பாதுகாத்தல்.

ஏராளானமான முட்டைகளை இடுதல்

முட்டைகலை அல்லது குஞ்சுகளை மறைத்து வைத்தல்


மேலே உள்ள விளக்கம் ஒரு பிராணியின் நடவடிக்கைகளைக் காட்டுகிறது. அந்தப் பிராணிக்கும் அதன் இனவகைக்கும் இந்த நடவடிக்கைகள் அவசியமாக அமைவதன் காரணம்

a)

இனவகை வாழ்க்கைப் போராட்டம்

b)

இனவகை இனப்பெருக்கம்

c)

இனவகை வாழ்வு வளம் ( நீடு நிலவல்)

d)

இனவகை பாதுகாத்தல்

12.

பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் 150 000 000km ஆகும். அவற்றின் இடையே உள்ள தூரம்170 000 000km ஆக அதிகரித்தால் அனேகமாக என்ன நிகழலாம்?

I. உயிர் வாழ்வன அனைத்தும் அழியும்

II. பூமியின் வெப்பநிலை மேலும் குளிர்ச்சியடையும் III. பகல் பொழுது மிக வெளிச்சமாக இருக்கும்

IV. பூமி சூரியனைச் சுற்றிவரும் கால அலவு அதிகரிக்கும்

a)

II, IV மட்டும்

b)

I, II, III மட்டும்

c)

I, III , IV மட்டும்

d)

I, II, IV மட்டும்

13.

பின்வருவனவற்றுள் எது நான்கு ஓட்டக்காரர்களின் வேகத்தைக் கண்டறிய மிகச் சிறந்த முறையாகும்? ( 2004)

a)

நிர்ணயிக்கப்பட்ட தூரத்தில் அவர்கள் ஓடும் நேரத்தைக் கணக்கிடுதல்

b)

வெவ்வேறு நேரத்தில் அவர்கள் ஓடும் வெவ்வேறு தூரத்தை அளவிடுதல்

c)

சம தூரத்தல் அவர்கள் ஓடுவதை உற்றறிதல்

d)

அவர்கள் ஓடும் தூரத்தை குறித்துக் கொள்ளாமல், அவர்கள் ஒருவர் பின் ஒருவராக ஓடுவதை உற்றறிதல்

14.

உனது குளிர்ச்சாதானப்பெட்டி பழுதாகி விட்டது, இந்நிலையில் நீ எவ்வாறு ஒரு மீனைக் கெடாமல் வைத்திருப்பாய்?

a)

மீனை உலர வைத்தல்

b)

மீனைத் தண்ணீரில் ஊறவத்தல்

c)

மீனை அலுமினியத் தகடு கொண்டு மடித்தல்

d)

மீனை திசுத்தாள் கொண்டு மடிஹ்த்டு டின்னில் வைத்தல்.

15.

கீழ்க்காணும் படத்தில் உள்ள நுண்ணுயிர் எவ்வகையைச் சார்ந்தது?

a)

குச்சியம்

b)

நச்சியம்

c)

பூஞ்சணம்

d)

அல்கா

16.

விலங்குகளின் நீடுநிலவல் என்றால் என்ன?

a)

விலங்கள் தன் இனத்தை முட்டையிட்டும் குட்டிப் போட்டும் பெருக்குதல்.

b)

விலங்குகள் எதிரிகளிடமிருந்து தன்னை தற்காத்துக் கொள்ளுதல்.

c)

விலங்குகள் தம் இனம் அழியாமல் இருக்க மேற்கொள்ளும் நடவடிக்கை.

17.

பின்வருவனவற்றுள் சரியான இணையைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

துர்நாற்றம் - ரப்லீசியா

b)

கூரிய முட்கள் - சேப்பஞ்செடி

c)

மரப்பால் - புகையிலை

18.

மாறிகள் எனப்படுவது_________________________.

a)

ஐம்புலன்களைப் பயன்படுத்தி உற்றறிதல்

b)

ஆராய்வின் போது கருத்தில் கொள்ள வேண்டிய 3 விபரங்கள்

c)

அறிவியல் கூற்றுக்கு ஏற்ப விளக்கம் அளிப்பது

19.

மேற்காணும் பட்டைக் குறிவரைவு ஒரு நிறுவனம் விற்ற வாகனங்களின் எண்ணிக்கையைக் காட்டுகிறது. மே மாதத்தில் விற்ற வாகனங்களின் எண்ணிக்கை எவ்வளவு?

a)

50 வாகனங்கள்

b)

60 வாகனங்கள்

c)

55 வாகனங்கள்

20.

உணவிலிருந்து மனிதனுக்குக் கிடைக்கும் சக்தியின் வகை என்ன?

a)

இயக்க சக்தி

b)

அணு சக்தி

c)

இரசாயன சக்தி

d)

வெப்ப சக்தி

21.

ஒலி சக்தி அதிரும் பொருள்களிலிருந்து உண்டாகின்றது.கீழ்க்காணும் பொருள்களில் எது ஒலி சக்தியை வெளியிடும்?

a)

கைமின்விளக்கு

b)

மின்னாக்கி

c)

இசைக்கருவி

d)

தெரு விளக்கு

22.
பின்வருவனவற்றுள் எது புதுப்பிக்கக்கூடிய சக்தியாகும் ?
a)
நிலக்கரி
b)
அணு சக்தி
c)
காற்று
d)
பெட்ரோலியம்
23.

மூச்சை வெளியிடும் சரியான செயற்பாங்கு எது?

a)

மூக்கு , மூச்சுக்குழாய், நுரையீரல்

b)

வாய், மூச்சுக்குழாய், நுரையீரல்

c)

நுரையீரல், மூச்சுக்குழாய், வாய்

d)

நுரையீரல், மூச்சுக்குழாய், மூக்கு

24.

பூமி தன் சுழலாவிட்டால் என்ன நிகழும்?

a)

இரவு பகல் தோன்றாது

b)

பூமியின் அனைத்து இடமும் சூரிய ஒளி பெறும்

c)

பூமி இருளடைந்துவிடும்

d)

பூமியின் ஒரு பகுதி இருளாகவும் மறுபகுதி வெளிச்சமாகவும் இருக்கும்.

25.

சூரியனுக்கு மிக தூரத்தில் உள்ள கோள் _______

a)

நிருதி

b)

பூமி

c)

நிலா

d)

வருணன்