wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் மொழி தர நிகர் மதிப்பீடு ஆண்டு 6

Total questions: 20

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

பூ + கடை =

a)

பூகடை

b)

பூக்கடை

c)

பூப்கடை

2.

தமிழ் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?

a)

90

b)

126

c)

247

d)

18

3.
உலகநீதியின்  பொருளைக் கண்டறிக .
நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்.
a)
நிலையற்றது என்று தெரிந்தும் அதை நிலை நிறுத்த முயல வேண்டாம் 
b)
மனசாட்சிக்கு விரோதமாகப் பொய் சொல்லக்கூடாது
4.
இரண்டாம் வேற்றுமை உருபு 'ஐ 'சேர்த்து எழுதுக .
மீனவன் + ஐ =
a)
மீனவன் 
b)
மீனவனன்
c)
மீனவனை
d)
மீனவனுக்கு
5.
ஒரே பொருள் தரும் சொற்களைக் கண்டறிக .
பூமி 
a)
பார் 
b)
கடவுள் 
c)
திங்கள் 
d)
மகிழ்ச்சி 
6.
ஏற்ற இடைச்சொல்லைத் தெரிவு செய்க .
அப்பா சைவப்பிரியர் ------------- புலால் உண்ண மாட்டார் .
a)
ஆனால்
b)
ஏனெனில் 
c)
ஏனென்றால் 
d)
ஆகையால் 
7.

1. கோடிடப்பட்டுள்ள இடத்திற்குப் பொருத்தமான இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க.


நேற்று கோலாலம்பூரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அதிகமான அடுக்குமாடி வீடுகள் நொடி பொழுதில் _________________ வென சரிந்து விழுந்தன

a)

மள மள

b)

மட மட

c)

கிடு கிடு

d)

A. தர தர

8.

தனவள்ளியின் தாயார் இறந்தபின் அவள் அவளுடைய சிற்றன்னையின் அரவணைப்பிலும் பாதுக்காப்பிலும் பராமரிக்கப்படுகிறாள்.


மேற்கண்ட கூற்றை விளக்கும் மரபுத்தொடரைத் தெரிவு செய்க

a)

ஈடுகட்டுதல்

b)

எடுப்பார் கைப்பிள்ளை

c)

கைக் கொடுத்தல்

d)

ஈவிரக்கம்

9.

சரியான மரபுவழக்குச் சொற்களைப் பயன்படுத்தியுள்ள வாக்கியத்தை தெரிவு செய்க?

a)

கயல்விழி தோட்டதில் உள்ள பூக்களைப் பறித்தாள்.

b)

குயவன் மட்பாண்டங்களைச் செய்தான்.

c)

வேடன் அம்பை எய்தான்.

d)

கபிலன் ஏணியைப் பயன்படுத்தி வீட்டின் கூரைகளைச் சரி செய்தான்.

10.

கொடுக்கப்பட்ட விளக்கத்திற்கு ஏற்ற உலகநீதியைத் தெரிவு செய்க. பெற்றெடுத்த தாயை எவ்வேளையிலும் மறந்துவிடக் கூடாது.

a)

ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்

b)

வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்

c)

மாதாவை யொருநாளு மறக்க வேண்டாம்

11.

ஆனமுதலில் அதிகஞ் செலவானால் .....'' எனும் நல்வழி கூறும் கருத்துக்குப் பொருத்தமான மரபுத்தொடரைத் தெரிவு செய்க.

a)

அள்ளி இறைத்தல்

b)

பெயர் பொறித்தல்

c)

கம்பி நீட்டுதல்

12.

ஆஸ்ட்ரோ வானவில் பாடல் போட்டியில் மிக இனிமையாகப்_____________ இளைஞர் முதல் பரிசைத் தட்டிச் சென்றார்.

a)

பாடிய

b)

பாடும்

c)

பாடினான்

d)

பாடல்

13.
‘அறம் செய விரும்பு’ எனும் ஆத்திசூடியின் பொருள் என்ன?
a)
உடலினை இளைக்க வைக்கும் முயற்சி இழிவாகும்.
b)
எந்த வேலையுமின்றி வெறுமனே இருப்பது இழிவாகும்.
c)
தருமம் மற்றும் நன்மை தரும் செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்ள வேண்டும்.
d)
கோபத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும்.
14.
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல 
a)
மகிழ்ச்சி
b)
சோதனை
c)
தோல்வி
d)
துன்பம்
15.
ஒவ்வொருவரும் தமக்கு வேண்டியவற்றைப் பெற்றுக்கொள்ள தாமே முயற்சி செய்ய வேண்டும். 
a)
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
b)
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
c)
புத்திமான் பலவான்
d)
அழுத பிள்ளை பால் குடிக்கும்
16.
சரியான இலக்கண மரபுச் சொல்லைப் பயன்படுத்தி, வாக்கியத்தைத் தேர்வுச் செய்க.
a)
அது ஒர் அழகிய வீடு.
b)
அஃது ஓர் அழகிய வீடு.
c)
அது ஒரு அழகிய வீடு.
17.
சரியான இணையைத் தெரிவு செய்க.
a)
அந்த + படம் = அந்தப் படம்
b)
அங்கு + சென்றான் = அங்கு சென்றான்
c)
பல + கேள்விகள் = பலக் கேள்விகள்
d)
அது + குடை = அதுக் குடை
18.
கிராமத்து மக்கள் கூட்டுப்பணியின் போது வீட்டுக் கூரையின் மட்டையை ___________.
a)
அடுக்கினர்
b)
வைத்தனர்
c)
ஒட்டினர்
d)
வேய்தனர்
19.
1)  கணினியைப் பயன்படுத்தி _________________களை எளிதாகச் செய்து முடிக்கலாம்.
a)
A) வேல்லை
b)
B)  வேலை
c)
C)  வேளை
d)
D)  வேழை
20.
இந்தியர்கள் __________ வாங்குவதில் அதிக கவனம் செலுத்துகின்றனர். உடைகளுக்கு ஏற்ற ஆபரணங்களையே அணிகின்றனர். விழாக்காலங்களில் ஆடைகளுக்கும் நகைகளுக்கும் செலவு செய்வதில் பணத்தை __________.

a)
ஆடையும் ஆபரணமும்,  வாரி இறைக்கின்றனர்
b)
ஆடை அணிகலன்,  வாரி இறைக்கின்றனர்
c)
ஆடை அணிகலன்,  கரைத்துக் குடிக்கின்றனர்
d)
ஆடையும் ஆபரணமும்,  கரைத்துக் குடிக்கின்றனர்