wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

படிவம் 1 - இலக்கணம்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

ஒன்றனைச் சுட்டிக்காட்ட வரும் எழுத்தை எவ்வாறு அழைப்பர்?

a)

நெட்டெழுத்து

b)

அகச்சுட்டு

c)

சுட்டெழுத்து

2.

புறச்சுட்டு சொல்லைத் தேர்ந்தெடுக.

a)

இப்புத்தகம்

b)

அவன்

c)

அங்கு

3.

எது காரணப்பெயர்?

a)

நாற்காலி

b)

மண்

c)

நீர்

4.

சுட்டெழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

5

b)

3

c)

2

5.

குன்றியவினை வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.

a)

நாய் குரைத்தது.

b)

அறவாணர் அழைத்தார்.

c)

ஆசிரியர் எழுதினார்.

6.

புணர்ச்சி எத்தனை வகைப்படும்?

a)

2

b)

3

c)

4

7.

விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்?

a)

5

b)

3

c)

4

8.

இரு சொற்கள் புணரும்போது நிலைமொழி ஈற்றிலோ வருமொழியின் முதலிலோ மாற்றங்கள் ஏற்பட்டால் அது எவ்வகை புணர்ச்சி?

a)

விகாரப் புணர்ச்சி

b)

இயல்பு புணர்ச்சி

9.

குன்றாவினை வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.

a)

ஆசிரியர் எழுதினார்.

b)

குழந்தை அழுதது.

c)

அப்பா மகிழ்ந்தார்.

10.

இனி, தனி, மற்ற என்னும் சொற்களுக்குப் பின் வலிமிகுமா/ வலிமிகாதா?

a)

வலிமிகும்

b)

வலிமிகாது

11.

எது சரி?

a)

தங்கையோடு சென்றான்.

b)

இனி கொடு

c)

யாது பயன்?

d)

தனி சொல்

12.

அகச்சுட்டு என்றால் என்ன?

a)

ஒரு சொல்லுக்குப் புறத்தே சுட்டெழுத்து நின்று இயங்குவது.

b)

ஒரு சொல்லின் அகத்தே சுட்டெழுத்து அடங்கி வருவது.

13.

எவை தவறு?

a)

பாதிப் பணம்

b)

அத்துணை பெரிய

c)

மற்றத் தலைவர்

d)

தனி சொல்

14.

எவை யகர உடம்படுமெய்?

a)

காலையுணவு

b)

தேவாரம்

c)

மாவிலை

d)

கூலியாள்

15.

இடுகுறிப்பெயர் என்றால் என்ன?

a)

ஒரு பொருளுக்குக் காரணத்தோடு இடப்பட்ட பெயர்ச்சொல்.

b)

ஒரு பொருளுக்கு ஏதொரு காரணமுமின்றித் தொன்று தொட்டு வழங்கி வரும் பெயர்ச்சொல்.

16.

சுட்டெழுத்துகளைத் தேர்ந்தெடுக.

a)

அ, உ, எ

b)

அ, இ, ஓ

c)

அ, இ, உ

17.

'உ' எனும் சுட்டெழுத்து இன்றைய வழக்கில் பயன்படுத்தப்படுகிறதா?

a)

ஆம்

b)

இல்லை

18.

எது தவறான காரணப்பெயர்?

a)

பறவை

b)

முக்காலி

c)

புத்தகம்

d)

காற்றாடி

19.

எது தவறு?

a)

ஏது கண்டாய்?

b)

யாவைத் தந்தாள்?

c)

எது கேட்டாய்?

20.

குன்றாவினை வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.

a)

பனிமதி மீட்டினாள்.

b)

அன்பழகன் ஓடினான்.

c)

சிவா சிரித்தான்.

d)

பனிமலர் வரைந்தாள்.