wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

10th தமிழ் இயல் 1,2,3

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

'மெத்த வணிகலம்' என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது.

a)

வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்

b)

பெரும் வணிகமும் பெரும் கலன்களும்

c)

ஐம்பெரும் காப்பியங்களும் அணிகலன்களும்

d)

வணிகக் கப்பல்களும் அணிகலன்களும்

2.

'காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்' நிலத்துக்கு நல்ல உரங்கள்.இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதியை குறிப்பிடுவது

a)

இலையும் சருகும்

b)

தோகையும் சண்டும்

c)

தாளும் ஓலையும்

d)

சருகும் சண்டும்

3.

எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்

a)

எந்+தமிழ்+நா

b)

எந்த+ தமிழ்+நா

c)

எம்+தமிழ்+நா

d)

எந்தம்+தமிழ்+நா

4.

' கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது'- தொடரில் இடம் பெற்றுள்ள தொழில் பெயரையும் வினையாலணையும் பெயரும் முறையை

a)

பாடிய; கேட்டவர்

b)

பாடல்; பாடிய

c)

கேட்டவர்; பாடிய

d)

பாடல்; கேட்டவர்

5.

வேர்க்கடலை,மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர் வகை

a)

குலை வகை

b)

மணி வகை

c)

கொழுந்து வகை

d)

இலை வகை

6.

"உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்

உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்"- பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை?

a)

உருவகம், எதுகை

b)

மோனை ,எதுகை

c)

முரண், இயைபு

d)

உவமை, எதுகை

7.

செய்தி 1 - ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 15 ஐ உலக காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம்.

செய்தி 2 - காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாமிடம் என்பது எனக்குப் பெருமையே.

a)

செய்தி 1 மட்டும் சரி

b)

செய்தி 1,2 ஆகியன சரி

c)

செய்தி 3 மட்டும் சரி

d)

செய்தி 1,3 ஆகியன சரி

8.

"பாடுஇமிழ் பனிக்கடல் பருகி" என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது?

a)

கடல் நீர் ஆவியாகி மேகமாதல்

b)

கடல் நீர் குளிர்ச்சி அடைந்து

c)

கடல் நீர் ஒலித்தல்

d)

கடல் நீர் கொந்தளித்தல்

9.

'பெரிய மீசை' சிரித்தார் வண்ணச் சொல்லுக்கான தொகையின் வகை எது?

a)

பண்புத்தொகை

b)

உவமைத்தொகை

c)

அன்மொழித்தொகை

d)

உம்மைத்தொகை

10.

பொருந்தும் விடை வரிசையைத் தேர்ந்தெடுக்க

அ) கொண்டல் - 1. மேற்கு

ஆ) கோடை - 2. தெற்கு

இ) வாடை - 3. கிழக்கு

ஈ)தென்றல் - 4. வடக்கு

a)

அ) 1,2,3,4

b)

ஆ) 3,1,4,2

c)

இ) 4,3,2,1

d)

ஈ) 3,4,1,2

11.

பின்வருவனவற்றுள் முறையான தொடர்

a)

தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு

b)

தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடம்முண்டு

c)

தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு

d)

தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு

12.

"சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி" என்னும் அடியில் பாக்கம் என்பது

a)

புத்தூர்

b)

மூதூர்

c)

பேரூர்

d)

சிற்றூர்

13.

அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது

a)

வேற்றுமை உருபு

b)

எழுவாய்

c)

உவம உருபு

d)

உரிச்சொல்

14.

காசிக்காண்டம் என்பது

a)

காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்

b)

காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்

c)

காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்

d)

காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்

15.

'விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு' இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை

a)

நிலத்திற்கேற்ற விருந்து

b)

இன்மையிலும் விருந்து

c)

அல்லிலும் விருந்து

d)

உற்றாரின் விருந்து