wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

CUET Level II Tamil H.W Ch1.1(6/11/2023)

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

“மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்கு தற்கு” கவிஞர் குறிப்பிடும் பழமைநலம்,
க) பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தது
உ) பொதிகையில் தோன்றியது
ங) வள்ளல்களைத் தந்தது

a)

க மட்டும் சரி

b)

க, உ இரண்டும் சரி

c)

ந மட்டும் சரி

d)

க, ங இரண்டும் சரி

2.

‘பொதிகை’ என்பது எந்த மலையைக் குறிக்கும்?

a)

குற்றால மலை

b)

விந்திய மலை

c)

இமய மலை

d)

சாமிமலை

3.

சிற்பி பாலசுப்பிரமணியம் எந்நூலை மொழிபெயர்த்தமைக்காகச் சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றார்?

a)

அக்கினி

b)

ஒளிப்பறவை

c)

அக்கினிசாட்சி

d)

சூரியநிழல்

4.

கவிஞர் சிற்பி எழுதிய எந்தப் படைப்பிலக்கியத்திற்கு சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது?

a)

ஒரு கிராமத்தின் கதை

b)

ஒரு கிராமமே அழுதது

c)

ஒரு கிராமத்தின் நதி

d)

ஒரு புளியமரத்தின் கதை

5.

‘செந்தமிழ்’ – எந்தப் புணர்ச்சி விதிகளின் அடிப்படையில் சரியாகப் புணரும்?

a)

ஈறுபோதல், இனமிகல்

b)

ஈறுபோதல், முன்னின்ற மெய்திரிதல்

c)

ஈறுபோதல், தன்னொற்றிரட்டல்

d)

ஈறுபோதல்

6.

இவற்றுள் எது கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் எழுதிய நூல்?

a)

சூரிய காந்தி

b)

சூரிய பார்வை

c)

ஒளிப்பூ

d)

சூரிய நிழல்

7.

கருத்து 1 : பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தவள் தமிழ்த்தாய்.
கருத்து 2 : விம்முகின்ற தோள்கள் செந்நிறத்துப் பூக்காடானது.

a)

கருத்து 1 சரி

b)

கருத்து 2 சரி

c)

இரண்டும் கருத்தும் தவறு

d)

கருத்து 1 சரி, 2 தவறு

8.

சிற்பி பாலசுப்பிரமணியன் சாகித்திய அகாதெமியின் …………….. இருக்கிறார்.

a)

தலைவராக

b)

செயலாளராக

c)

பொருளாளராக

d)

உறுப்பினராக

9.

சிற்பி பாலசுப்பிரமணியம் எத்தனை முறை சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ளார்?

a)

மூன்று

b)

இரு

c)

நான்கு

d)

பல

10.

சிற்பி பாலசுப்பிரமணியம் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றிய பல்கலைக்கழகம்

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

c)

தமிழ்

d)

காமராசர்

11.

சிற்பியின் பன்முகங்களில் பொருந்தாததைக் கூறுக.

a)

கவிஞர்

b)

ஓவியர்

c)

பேராசிரியர்

d)

மொழிபெயர்ப்பாளர்

12.

‘இளந்தமிழே’ என்னும் கவிதை சிற்பி பாலசுப்பிரமணியத்தின் எக்கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது?

a)

சூரிய நிழல்

b)

ஒரு கிராமத்து நதி

c)

ஒளிப்பறவை

d)

நிலவுப்பூ

13.

உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே – என்ற விதிக்குப் பொருத்தமான சொல்லைக் கண்டறிக.

a)

உன்னையல்லால்

b)

வானமெல்லாம்

c)

செந்தமிழே

d)

செம்பரிதி

14.

செம்பரிதி – இச்சொல்லுக்குரிய புணர்ச்சி விதியைக் கண்டறிக.

a)

ஈறுபோதல்

b)

இனமிகல்

c)

ஆதிநீடல்

d)

முன்நின்ற மெய்திரிதல்

15.

…………… முதலான வள்ளல்களை ஈன்று தந்தவள் தமிழன்னை .

a)

சடையப்ப வள்ளல்

b)

சீதக்காதி

c)

பாரி

d)

நெடுங்கிள்ளி