wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

vidukathai

Total questions: 16

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

அள்ளவும் முடியாது கிள்ளவும் முடியாது அது என்ன?

a)

நீர்

b)

காற்று

2.

ஒற்றைக்கால் மனிதனுக்கு ஒன்பது கை. அது என்ன?

a)

மலை

b)

மரம்

3.

ஒற்றைக் காலில் ஆடுவான். ஓய்ந்து போனால் படுப்பான் அவன் யார்?

a)

கோலி

b)

பம்பரம்

4.

ஊருக்கெல்லாம் ஓய்வு

உழைப்பவருக்கு ஓய்வு

இவனுக்கு மட்டும் ஓய்வில்லை. இரவும் பகலும் ஓட்டந்தான்.இவன் யார்?

a)

பூமி

b)

மூச்சு

5.

கண்ணில்லாத என்னால் அழமுடியும், பார்க்க முடியாது. நான் யார் ?

a)

வானம்

b)

மேகம்

6.

உடம்பு இல்லாத எனக்கு தலை உண்டு, பூ உண்டு நான் யார்?

a)

நாணயம்

b)

செடி

7.

இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?

a)

கரடி

b)

தேள்

c)

ஒட்டகம்

8.

பிடுங்கலாம் நடமுடியாது அது என்ன?

a)

செடி

b)

மரம்

c)

தலைமுடி

9.

உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணீந்திருப்பான்? அவன் யார்?

a)

வெங்காயம்

b)

மனிதன்

c)

வானவில்

10.

கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்?

a)

கரும்பு

b)

சீனி

c)

லட்டு

11.

மரத்தின் மேலே தொங்குவது மலைப் பாம்பல்ல அது என்ன?

a)

ஆந்தை

b)

குரங்கு

c)

விழுது

12.

ஓர் அரண்மனையில் முப்பத்திரெண்டு காவலர்கள் அது என்ன?

a)

அரண்மனை

b)

பற்கள்

c)

முத்துக்கள்

13.

கடல் நீரில் வளர்ந்து , மழை நீரில் மடிவது என்ன ?

a)

நண்டு

b)

மீன்

c)

உப்பு

14.

வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ. அது என்ன?

a)

இனிப்பு

b)

சிரிப்பு

c)

கசப்பு

15.

இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன?

a)

வாழை

b)

பலா

c)

முருங்கை

16.

வீட்டில் வளரும் என்னை திருடனுக்கு பிடிக்காது அது என்ன?

a)

நாய்

b)

பூனை

c)

கோழி