Worksheetsபழமொழி
Total questions: 10
Worksheet time: 5mins
கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்திற்குப் பொருத்தமான பழமொழி எது ?
ஒருவரின் அருமை அவர் பிரிந்து சென்றபோதுதான் தெரியும்.
A. மனம் உண்டானால் மார்க்கம் உண்டு
B. நிழலின் அருமை வெயிலில் தெரியும்
C. வெள்ளம் வருமுன் அணைபோடு
D. காற்றுள்ள போதே தூற்றிக்கொள்
படத்திற்கேற்ற பழமொழியைத் தேர்ந்தெடுக.
A. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
B.அறிவுடையாரை அரசனும் விரும்பும்
C. நிழலின் அருமை வெயிலில் தெரியும்
D. சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய வேண்டும்
_____________ என்பதற்கொப்ப செந்தோசா கிராமத்து மக்கள் ஒன்றுகூடி செயல்பட்டு, தங்கள் வசிப்பிடத்தில் ஏற்பட்ட திருட்டுச் சம்பவத்தை ஒழித்தனர்.
A. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
B.வெள்ளம் வருமுன் அணைபோடு
C.அன்பான நண்பனை ஆபத்தில் அறி
D.ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா ?
கொடுக்கப்பட்டிருக்கும் படத்திற்குப் பொருந்தும் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்யவும்.
A. அழுத பிள்ளை பால் குடிக்கும்
B.இளங்கன்று பயமறியாது
C. பதறாத காரியம் சிதறாது
D. புத்திமான் பலவான்
விளக்கத்திற்குப் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.
“திரு.வளவன், நீங்கள் கணிதத்துறை பட்டதாரி. உங்களுக்குக் கணிதம் போதிக்கும் முறையை நான் சொல்லித் தர அவசியமில்லை,” என்றார் தலைமையாசிரியர்.
A. மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?
B. தீட்டின மரத்திலே கூர் பாத்ப்பதா?
C. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
ஒரு செயலின் நன்மை தீமைகளை ஆராய்ந்த பிறகே அச்செயலில் ஈடுபட வேண்டும்.
A. ஆழம் அறியாமல் காலை விடாதே
B. ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்
C. முன் வைத்த காலைப் பின் வைக்காதே
கீழ்க்காண்பனவற்றுள் வாழ்க்கையில் எச்சரிக்கையுடன் நடவடிக்கைகள் மேற்கொண்டால் எதிர்வரும் துன்பங்களையோ இடர்களையோ தவிர்க்கலாம் எனும் கருத்தை விளக்கும் பழமொழி யாது ?
A. சிக்கனம் சீரளிக்கும்
B. சிறுதுளி பெருவெள்ளம்
C. வெள்ளம் வருமுன் அணைபோடு
D. அறிவுடையாரை அரசனும் விரும்பும்
நான் அவசரப்பட்டு முடிவெடுத்து பணத்தை இழந்து விட்டேன்.
வேண்டாம் என்று அப்போதே சொன்னேன் கேட்டாயா ?
A. பதறாத காரியம் சிதறாது.
B. ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
C. மனம் உண்டானால் மார்க்கம் உண்டு
பின்வரும் சூழலுக்கு ஏற்ற பழமொழி யாது ?
யாசன் : என்னால் இந்த யோகாசனத்தைச் செய்ய முடியவில்லையே..
பாண்டியன் : எனக்கும்தான் யாசன். எந்தப் பயிற்சிகளை நாம் சிறு வயதிலிருந்தே கற்றிருக்க வேண்டும்.
A. காற்றுள்ள போதே தூற்றிக்கொள்
B. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா ?
C. ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்
D. விளையும் பயிர் முளையிலேயே தெரியும்
படம் விளக்கும் பழமொழியைத் தேர்ந்தெடுக்கவும்.
என் இலட்சியமே ஒரு மருத்துவராவதுதான்.
A. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா ?
B. மனம் உண்டானால் மார்க்கம் உண்டு
C. தீட்டின மரத்திலே கூர் பார்ப்பதா ?
D. சிறு துரும்பும் பல் குத்த உதவும்
