wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம்

Total questions: 30

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

திரையில் கார்த்திக்_________________________ அநேக பாடல்கள் மாணவர்களின் தன்முனைப்பைத் தூண்டுபவைகளாக அமைந்திருந்தன.

a)

ஆடிய

b)

பாடிய

c)

கூறிய

d)

கூறிய

2.

கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் கிரந்த எழுத்தைக் கொண்டிராத சொல் எது?

a)

சரஸ்வதி

b)

ஜாடி

c)

புஸ்பம்

d)

மேசை

3.

சேர்தெழுதுக

சிறுமை + ஊர்

a)

சிறுமைஊர்

b)

சிறுமையூர்

c)

சிறு ஊர்

d)

சிற்றூர்

4.

பிரித்தெழுதுக

அவ்வுயிர்

a)

அ + வுயிர்

b)

அ + உயிர்

c)

அவ் + உயிர்

d)

அந்த + உயிர்

5.

சரியாக வலிமிகுந்து வந்துள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க

a)

நீ அங்கேச் செல்

b)

இந்தப் படத்தை வரைந்தது யார் ?

c)

ஏன் பாடங்களைச் செய்யவில்லை

d)

கவிதா தன் தம்பியோடுச் சென்றாள்

6.

தலைமையாசிரியர் திருமதி விமலாதேவி நிகழ்த்திய உரை _____________________________சிந்திக்க வைத்தது

a)

தங்களை

b)

எங்களை

c)

உங்களை

d)

நீங்கள்

7.

வினையெச்ச வாக்கியத்தைத் தெரிவு செய்க

a)

அணில் பழத்தைக் கொறித்து தின்றது

b)

சுமதி தீட்டிய ஓவியம் மிகவும் அழகாக இருந்தது

c)

கண்ணதாசன் புனைந்த பாடல்கள் கருத்து அழமிக்கவை

d)

வாசுகிக்கு செல்வி தந்த கொலுசு மிகவும் அழகாக இருந்தது

8.

ராமுவிற்குப் பொங்கல் கொண்டாட முக்கியமான பொருள் ஒன்று தேவைப்படுகிறது. அவன் யாரைத் தொடர்பு கொள்ளவேண்டும்?

a)

சிற்பி

b)

தச்சன்

c)

குயவன்

d)

இடையன்

9.

செய்வினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

இசை நிகழ்ச்சியை இசை கலைஞர்கள் படைத்தனர்.

b)

இசைநிகழ்ச்சி இசை கலைஞர்களால் சிறப்பாக படைக்கப்பட்டது

c)

சிறப்பான இசை கலைஞர்களால் இசை நிகழ்ச்சி படைக்கப்பட்டது

d)

இசை கலைஞர்கள் இசை நிகழ்ச்சியைச் சிறப்பாகப் படைக்கப்பட்டன

10.

கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் தவறான வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

யாழினி பழத்தைப் பறிக்கின்றாள்

b)

மாணவர்கள் திடலில் விளையாடுகின்றார்

c)

பார்கவி இறைவனை வணங்குகின்றாள்

d)

அப்பா நாளிதழ் வாசிக்கின்றார்

11.

மூன்றாம் வேற்றுமை உருபைக் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

வாசு பாடசாலையிலிருந்து தாமதமாக வீடு திரும்பினான்.

b)

ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற அருணை அனைவரும் பாராட்டினர்.

c)

குமார் தன் அம்மாவோடு சந்தைக்குச் சென்றான்.

d)

மாணவர்கள் கணினி அறையில் கவனமாக பாடம் பயின்றனர்.

12.

சரியாக வலிமிகுந்துள்ள சொற்றொடர்களைத் தெரிவு செய்க.

a)

கொண்டுச் சென்றான்

b)

தொட்டுப் பார்த்தாள்

c)

செய்துப் பார்த்தான்

d)

வந்துப் போனார்

13.

கீழ்க்காணும் வாக்கியத்தை எதிர்கால பன்மை வாக்கியமாக மாற்றுக.


ஆசிரியர் முத்தமிழ் விழாவில் இலக்கிய சொற்பொழிவு ஆற்றினார்.

a)

ஆசிரியர் முத்தமிழ் விழாவில் இலக்கிய சொற்பொழிவு ஆற்றுவர்.

b)

ஆசிரியர் முத்தமிழ் விழாவில் இலக்கிய சொற்பொழிவு ஆற்றுவார்.

c)

ஆசிரியர்கள் முத்தமிழ் விழாவில் இலக்கிய சொற்பொழிவு ஆற்றுவர்.

d)

ஆசிரியர் முத்தமிழ் விழாவில் இலக்கிய சொற்பொழிவு ஆற்றினார்.

14.

கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் தவறானவற்றைத் தெரிவு செய்க

a)

உயிர்மெய் வல்லின எழுத்துகள் – 70

b)

உயிர்மெய் குறிலெழுத்துகள் - 90

c)

உயிர்மெய் நெடிலெழுத்துகள் - 126

d)

உயிர்க் குறில் எழுத்துகள் - 5

15.

மேற்காணும் படம் எதனை உணர்த்துகிறது ?

a)

ஒன்றன்பால்

b)

பலர்பால்

c)

உயர்திணை

d)

அஃறிணை

16.

பின்வரும் புணர்ச்சி அமைப்புமுறைகளுள் எவை பிழையானவை?

a)

அ + யானை = அவ்யானை

b)

பத்து + ஆறு = பதினாறு

c)

நன்மை + நிலை = நன்நிலை

d)

இ + யாழ் = இவ்யாழ்

17.

மருத்துவர் ஒரு நோயாளியிடம் உணவில் சீனியின் ____________________ குறைக்கும்படி கேட்டுக் கொண்டார்.

a)

அளவு

b)

அளவினை

c)

அளவால்

d)

அளவை

18.

பிழையான பெயர்ச்சொல் இணையைத் தெரிவு செய்க

a)

கூரை-சினைப்பெயர்

b)

அணிச்சல்- பொருட்பெயர்

c)

வரைதல் – தொழிற்பெயர்

d)

வால் -சினைப்பெயர்

19.

பிழையான விடையைத் தெரிவு செய்க.

a)

க் + ஓ = கோ

b)

ன் + இ = னி

c)

ல் + ஊ = லூ

d)

ப் + ஆ = ப

20.

சரியான வாக்கிய வகையைத் தெரிவு செய்க.


திருமண விருந்தில் வசந்தன் இசைகருவிகளை மீட்டினான்; இனிமையாகப் பாடினான்; அருமையாக ஆடினான்.

a)

தனி வாக்கியம்

b)

தொடர் வாக்கியம்

c)

விழைவு வாக்கியம்

d)

கட்டளை வாக்கியம்

21.

சரியான இலக்கண மரபைத் தேர்ந்தெடுத்திடுக



பூவழகன் ___________________ பாரத்து மகிழ்ந்த இடங்களை__________________நண்பர்களுக்கு இணையதளத்தில் காட்டி மகிழ்ந்தான்,

a)

தாம், தன்

b)

தான், தன்

c)

தான், தம்

d)

தாம், தம்

22.

கீழ்க்காணும் வாக்கியத்தில் கோடிடப்பட்ட சொல்லுக்கு ஏற்ற சரியான விடையைத் தெரிவு செய்க.


மாலதி பூங்காவில் வேகமாக ஓடிய சிறுவர்களைக் கண்டாள்

a)

பெயரடை

b)

வினையெச்சம்

c)

வினையடை

d)

பெயரெச்சம்

23.

வாக்கியத்திலுள்ள சரியான தொகுதிப் பெயரினை அடையாளம் காண்க.


என் பாட்டன் தம் தலையில் மிஞ்சியிருக்கும் ஓரிரு முடிகளைச் சீப்பினைக் கொண்டு தலைவாரியப் பின் தமது வாழைத் தோப்புக்குக் கம்பீரமாக நடந்து சென்றார்.

a)

கொள்ளு

b)

சீப்பினை

c)

தோப்புக்கு

d)

வாழை தோப்புக்கு

24.

ஏற்ற நிறுத்தக் குறிகளைத் தெரிவு செய்க.


நாகப்பாம்பு புற்றிலிருந்து வெளிவந்து ( ) மெல்ல ஊர்ந்து ( ) இரை

தேட சென்றது.

a)

; ;

b)

, ,

c)

, ;

d)

; ,

25.

கீழக்காணும் படங்களில் எவை பலவின்பாலைக் குறிக்கின்றது ?

a)
b)
c)
d)
26.

கீழ்க்காணும் சொற்களுள் கெடுதல் விகாரப்புணர்ச்சியைக் காட்டும் சொல்லைத் தெரிவு செய்க.

a)

மரங்கண்டான்

b)

கட்குடம்

c)

பூவரும்பு

d)

காரவடை

27.

கீழ்க்காண்பனவற்றுள் எது சினைபெயர் அல்ல?

a)
b)
c)
d)
28.

கீழ்க்காணும் வாக்கியத்திற்கு மிகப் பொருத்தமான இடைச் சொற்களைத் தெரிவு செய்க.


அருநிலா பண்புமிக்க மாணவி.________________________அவளை அனைவரும் பாராட்டுவர்____________________________ அவள் தோழி மேகலாவோ அவளுக்கு எதிர்மாறானவள்.

a)

எனவே ; ஏனென்றால்

b)

ஏனெனில் ;இருப்பினும்

c)

அதற்காக ; மேலும்

d)

எனவே ; ஆனால்

29.

இனவெழுத்தைக் கொண்டிராத சொல்லைத் தெரிவு செய்க.

a)

மச்சம்

b)

தங்கம்

c)

மந்தம்

d)

பன்றி

30.

பினவரும் வாக்கியத்தில் உள்ள வினைமுற்றைத் தெரிவு செய்க.


கந்தன் கடைக்குச் சென்று, மிட்டாய்களையும் நொறுக்குத் தீனிகளையும் வாங்கினான்.

a)

கந்தன்

b)

சென்று

c)

வாங்கினான்

d)

கடைக்குச்