wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கண இலக்கிய வினா விடை பயிற்சி

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

கொடுக்கபட்ட சொல்லில் எது அஃறிணையைக் குறிக்கிறது?

a)

ஆசிரியர்

b)

மேதை

c)

அழுங்கு

d)

ஐஸ்வர்யா

2.

'மேசைகள் ' என்ற சொல் எந்த பால் வகையைச் சேர்ந்தது?

a)

பலவின் பால்

b)

ஆண்பால்

c)

பலர்பால்

d)

ஒன்றன்பால்

3.

ஸ்ரீ சுபகீர்த்தி எனும் பெயரில் எது கிரந்த எழுத்து ?

a)

கீ

b)

ர்

c)

சு

d)

ஸ்ரீ

4.

கீழ்க்காண்பனவற்றுள் கெடுதல் விகாரத்தைக் காட்டும் விடையைத் தெரிவு செய்க.

a)

எ + யானை = எவ்யானை

b)

பொன் + தகடு = பொற்றகடு

c)

தண்மை + நீர் = தண்ணீர்

d)

கால் + பந்து = காற்பந்து

5.

கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் வினைமுற்றைத் தெரிவு செய்க.

a)

பாய்ந்து ஓடிய

b)

விரட்டிச் சென்றாள்

c)

அரிந்த காய்கறி

d)

எழுந்து நடக்க

6.

கொடுக்கப்பட்ட சொற்றொடர் ( உடைந்த கண்ணாடி) எவ்வகையைச் சார்ந்தது எனத் தெரிவு செய்க.

a)

பெயரெச்சம்

b)

வினையெச்சம்

c)

பெயரடை

d)

வினையடை

7.

பழமொழியை நிறைவு செய்க : ________________________________ முளையிலே தெரியும்

a)

நிழலின் அருமை

b)

அகத்தின் அழகு

c)

விளையும் பயிர்

d)

சுடர் விளக்காயினும்

8.

'போகாத விடந்தனிலே போக வேண்டாம் ' எனப் பாடியவர் யார்?

a)

ஓளவையார்

b)

உலகநாத பண்டிதர்

c)

பாரதியார்

d)

அதிவீரராம பாண்டியன்

9.

சரியான இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க :

பொம்மை கேட்டு அடம் பிடித்த குழந்தையை மித்தேஷவரன் _______ என இழுத்துச் சென்றார்.

a)

பளார் பளார்

b)

நற நற

c)

மள மள

d)

தர தர

10.

உலக நீதியை நிறைவு செய்க :

தனந்தேடி _________ புதைக்க வேண்டாம்

a)

உண்ணாமற்

b)

யுண்ணாமற்

c)

உண்னாமற்

d)

யுன்னாமற்