NEW
Font size
Worksheetsஇலக்கண இலக்கிய வினா விடை பயிற்சி
Total questions: 10
Worksheet time: 3mins
கொடுக்கபட்ட சொல்லில் எது அஃறிணையைக் குறிக்கிறது?
ஆசிரியர்
மேதை
அழுங்கு
ஐஸ்வர்யா
'மேசைகள் ' என்ற சொல் எந்த பால் வகையைச் சேர்ந்தது?
பலவின் பால்
ஆண்பால்
பலர்பால்
ஒன்றன்பால்
ஸ்ரீ சுபகீர்த்தி எனும் பெயரில் எது கிரந்த எழுத்து ?
கீ
ர்
சு
ஸ்ரீ
கீழ்க்காண்பனவற்றுள் கெடுதல் விகாரத்தைக் காட்டும் விடையைத் தெரிவு செய்க.
எ + யானை = எவ்யானை
பொன் + தகடு = பொற்றகடு
தண்மை + நீர் = தண்ணீர்
கால் + பந்து = காற்பந்து
கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் வினைமுற்றைத் தெரிவு செய்க.
பாய்ந்து ஓடிய
விரட்டிச் சென்றாள்
அரிந்த காய்கறி
எழுந்து நடக்க
கொடுக்கப்பட்ட சொற்றொடர் ( உடைந்த கண்ணாடி) எவ்வகையைச் சார்ந்தது எனத் தெரிவு செய்க.
பெயரெச்சம்
வினையெச்சம்
பெயரடை
வினையடை
பழமொழியை நிறைவு செய்க : ________________________________ முளையிலே தெரியும்
நிழலின் அருமை
அகத்தின் அழகு
விளையும் பயிர்
சுடர் விளக்காயினும்
'போகாத விடந்தனிலே போக வேண்டாம் ' எனப் பாடியவர் யார்?
ஓளவையார்
உலகநாத பண்டிதர்
பாரதியார்
அதிவீரராம பாண்டியன்
சரியான இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க :
பொம்மை கேட்டு அடம் பிடித்த குழந்தையை மித்தேஷவரன் _______ என இழுத்துச் சென்றார்.
பளார் பளார்
நற நற
மள மள
தர தர
உலக நீதியை நிறைவு செய்க :
தனந்தேடி _________ புதைக்க வேண்டாம்
உண்ணாமற்
யுண்ணாமற்
உண்னாமற்
யுன்னாமற்
