wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி (பழமொழி) ஆண்டு 5 - பாடநூல் பக்கம் 67-68

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

ஏன் ஆண் காகமும் பெண் காகமும் மரத்தில் கூடு கட்டின?

a)

மழை காலம் தொடங்கியதால்

b)

வசந்த காலம் தொடங்கியதால்

2.

அருகில் வேறு மரத்திலிருந்து எந்தப் பறவை அந்தக் காகங்கங்களைக் கவனித்தது?

a)

மயில்

b)

குயில்

3.

ஏன் குயில் காகங்களைக் காணச் சென்றது?

a)

தனக்குப் பறக்கச் சொல்லிக் கொடுக்க

b)

தனக்குக் கூடு கட்டச் சொல்லிக் கொடுக்க

4.

காகம் குயில் தன் கூண்டில் முட்டையிடச் சம்மதித்தது. அதற்குப் பதிலாக குயிலிடம் என்ன உதவி கேட்டது?

a)

குளித்து நீந்தக் கற்றுக் கொடுக்க

b)

இனிமையாகப் பாடக் கற்றுக் கொடுக்க

5.

கீழ்க்கண்ட பழமொழியின் பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.


மனம் உண்டானால் மார்க்கம் உண்டு

a)

வாழ்க்கையில் எச்சரிக்கையுடன் நடவடிக்கைகளை மேற்கொண்டால் எதிர்வரும் துன்பங்களையோ இடர்களையோ தவிர்க்கலாம்.

b)

ஒரு செயலைச் செய்து முடிக்க முடியும் என மனவுறுதி கொண்டால் அதனைச் செய்யும் வழிகளும் தானகப் பிறக்கும்.

6.

பழமொழியைப் பூர்த்தி செய்யவும்.


வருந்தினால் ................ இல்லை

a)

இடறாதது

b)

வாராதது

c)

காணாதது

7.

பழமொழியின் சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.


வெள்ளம் வருமுன் அணைபோடு

a)

வாழ்க்கையில் எச்சரிக்கையுடன் நடவடிக்கைகளை மேற்கொண்டால் எதிர்வரும் துன்பங்களையோ இடர்களையோ தவிர்க்கலாம்.

b)

வாழ்க்கையில் எச்சரிக்கையுடன் நடவடிக்கைகளை மேற்கொண்டால் எதிர்வரும் துன்பங்களையோ இடர்களையோ தவிர்க்க இயலாது.

c)

வாழ்க்கையில் எச்சரிக்கையுடன் நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் எதிர்வரும் துன்பங்களையோ இடர்களையோ தவிர்க்கலாம்.

8.

சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.


மாணவர்கள் தேர்வுக்கு முன்னதாக எல்லாப் பாடஙக்ளையும் மீள்பார்வை செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே தோல்வி என்பது நம்மை நெருங்காது.

a)

வெள்ளம் வருமுன் அணைபோடு

b)

மனம் உண்டானால் மார்க்கம் உண்டு

9.

சூழலுக்குப் பொருந்தும் பழமொழியைத் தெரிவு செய்க.


எல்லாப் பாடங்களையும் திறம்படக் கற்க முடியும் என்று மனவுறுதியுடன் செயல்பட்டால் நிச்சயம் அதற்கான வழிகளும் பயனும் கிட்டும்.

a)

மனம் உண்டானால் மார்க்கம் உண்டு

b)

வெள்ளம் வருமுன் அணைபோடு

10.

திரு இரமணி எல்லா சூழலிலும் அக்கறையுடனும் கவனத்துடனும் கற்பான். ஏனெனில் அதுதான் அவன் வெற்றியின் ஊன்றுகோல்.

a)

வருந்தினால் வராதது இல்லை

b)

மனம் உண்டானால் மார்க்கம் உண்டு.

11.

பழமொழியை நிறைவு செய்யவும்.


மனம் .............. மார்க்கம் ..............

a)

உண்டானால், இல்லை

b)

உண்டானால், உண்டு

c)

கண்டாயானால், உண்டு

12.

பழமொழியை நிறைவு செய்யவும்.


.............. வருமுன் அணைபோடு

a)

வெயில்

b)

வெள்ளம்

c)

பள்ளம்