Font size
Worksheetsஒலி வேறுபாடு 1 P5
Total questions: 20
Worksheet time: 10mins
தேவி பூந்தோட்டத்திற்குச் சென்றாள். அங்கே இருந்த
மல்லிகை மலர்கள் ______________ வீசின.
மணம்
மனம்
அமீர் தன் புதிய வீட்டிலிருந்து பள்ளிக்குச் சென்றான். ______________ தவறிச் சென்றதால் அவன் தாமதமாகப் பள்ளியை அடைந்தான்.
வழி
வலி
கபிலன் தன் நண்பனுக்குக் கடிதம் எழுதினான். எழுதிய கடிதத்தை ஓர் ____________ போட்டான்.
உரையில்
உறையில்
வாகனம் திடீரென்று சாலையில் நின்றது.
நான் அதைப் பழுது பார்த்ததால் கையில் ________________ பட்டது.
கரை
கறை
இளைஞர்கள் நீண்ட நேரம் காற்பந்து விளையாடினார்கள். பிறகு தாகத்தைத் தணிக்க _____________ அருந்தினார்கள்.
பானம்
பாணம்
மீனாவின் தாயார் அவளை மிகவும் சிரமப்பட்டு வளர்த்தார். மீனா அவருடைய சிரமத்தை _________ விரும்பினாள்.
குறைக்க
குரைக்க
கலாவின் அப்பா மிகவும் கோபக்காரர். அவருடைய _________ அறிந்து நடந்துகொள்வதில் கலா கெட்டிக்காரி.
மனம்
மணம்
சேகர் காலில் செருப்பு அணியாமல் கடற்கரையில் நடந்துகொண்டிருந்தான். அவனுடைய காலில் கூர்மையான
________ ஒன்று குத்திவிட்டது.
கள்
கல்
சென்ற வருடம் ஜூன் மாத விடுமுறையில் அதிக மழை பெய்தது. அப்போது ஆர்ச்சட் சாலையில் ________________ ஏற்பட்டதால் கடைகளில் வியாபாரம் பாதிக்கப்பட்டது.
வெள்ளம்
வெல்லம்
மேடையில் அறிஞர் ஒருவர் _________ ஆற்றினார். அதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் அனைவரும் அவரது அறிவாற்றலை எண்ணி வியந்தனர்.
உரை
உறை
அரசன் மரத்தடியில் உறங்கிக்கொண்டிருந்தான். அங்கு வந்த குரங்கு அவனுடைய _______________ எடுத்துக்கொண்டு ஓடியது.
வாலை
வாளை
குகன் தன் நண்பர்களுடன் காற்பந்து விளையாடியபோது, கால் இடறிக் கீழே விழுந்தான். அப்போது அவனுடைய __________________ காயம் ஏற்பட்டது.
தோலில்
தோளில்
குளத்தில் அழகான __________________ நீந்திக்கொண்டிருந்தது. மாணவர்கள் அதைப் பார்த்து ரசித்தனர்.
அன்னம்
அண்ணம்
பல நாள்கள் காட்டில் அலைந்தும் மிருகங்களுக்கு _______________ கிடைக்கவில்லை.
இரை
இறை
பிரதமர் தனது தேசிய தின ____________ பல
முக்கியக் கருத்துகளைக் கூறினார். கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றியும் வலியுறுத்தினார்.
உறையில்
உரையில்
மீனவர்கள் அதிகாலையில் கடலுக்குச் சென்றனர். அவர்கள் ____________ வீசி மீன் பிடித்தனர்..
வளை
வலை
லதா _____________ ஆண்டுத் தேர்வில் சிறப்பாகச் செய்யவில்லை. அதனால், இறுதியாண்டுத் தேர்வுக்காக இப்போதே படிக்க ஆரம்பித்துவிட்டாள்.
அரை
அறை
கட்டிலுக்கு அடியில் பாம்பு ஒன்று கிடந்ததைப் பார்த்த என் அம்மா பதறிப்போய் அதை _________ ஒன்றால் அடித்தார்.
களி
கழி
என் தம்பியின் பிறந்தநாள் என்பதால் நான் அவனைக் கட்டி __________, முத்தம் கொடுத்தேன்.
அணைத்து
அனைத்து
டிசம்பர் மாதம் மழைக்காலமாக இருப்பதால் அதிகாலையில் எங்கும் _________________ மூட்டமாக இருக்கும்.
பனி
பணி
