wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

6/8/2020- சவாலுக்குத் தயாரா!

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

கடைக்காரர் ஒரு குவளை நிறைய கரும்புச் சாற்றை ஊற்றித் தயாளனிடம் கொடுத்தார். ஆனால், அது தான் கேட்ட பானம் _______________ என்று அவன் கூறினான்.

a)

அல்ல

b)

அள்ள

2.

நேற்று இரவு குட்டி இந்தியாவில் இரண்டு குண்டர் கும்பல்களுக்கு இடையே சண்டை மூண்டது. அங்கு வந்த காவலர்கள் அவர்களை _______________ முயற்சி செய்தனர்.

a)

விலக்க

b)

விளக்க

3.

திடீரென்று மின்சாரம் தடைபட்டதால் ரூபன் தன் வரவேற்பு அறையில் மெழுகுவத்தி ஒன்றை ஏற்றி வைத்தான். அது நீண்ட நேரம் ______________ கொண்டிருந்தது.

a)

எரிந்து

b)

எறிந்து

4.

மதியழகன் பூமலைத் தோட்டத்திலுள்ள ஏரியில் எழில்மிகுந்த

ஒரு கருப்பு _____________ நீந்துவதைக் கண்டான். அது இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்று அவன் தாத்தா கூறினார்

a)

அன்னம்

b)

அண்ணம்

5.

பெரும்பாலான மாணவர்கள் தாய்மொழி நூல்களை _______________

வாசிப்பதில்லை.

a)

பெற்று

b)

விரும்பி

6.

பாட்டுப் போட்டியில் _______________ பாடிய சீதா, முதல் பரிசைத் தட்டிச்

சென்றாள்.

a)

இனிமையான

b)

இனிமையாக

7.

வேகமாக _______________ சிறுவன், கால் இடறிக் கீழே விழுந்தான்

a)

ஓடுவதால்

b)

ஓடிய

8.

மலிவு விற்பனையின்போது எல்லா கடைகளிலும் பொருள்கள் _______________

விலையில் விற்கப்படும்.

a)

குறைந்த

b)

குறைந்து

9.

சாலை விதிகளை _______________ நடந்தால்தான் நாம் பாதுகாப்பாகச் சாலையைக் கடக்கலாம்.

a)

பின்பற்றி

b)

தொடர்ந்து

10.

நாயால் துரத்தப்பட்ட ராமு, அருகிலுள்ள மரத்தில்

_______________ ஒளிந்து கொண்டான்.

a)

ஏறி

b)

ஏரி

11.

அன்றாடம் செய்தித்தாள் படிப்பதால் நாம் நம் நாட்டு நடப்புகளைப் பற்றி _______________ கொள்ளலாம்.

a)

அரிந்து

b)

அறிந்து

12.

பேரங்காடியில் பொருட்களைத் திருடியத் திருடனின் கையில் _______________ இட்டு, அழைத்துச் சென்றார் காவலர்.

a)

விளங்கு

b)

விலங்கு

13.

பேரங்காடியில் பொருட்களைத் திருடியத் திருடனின் கையில் _______________ இட்டு, அழைத்துச் சென்றார் காவலர்.

a)

காய்ந்து

b)

வாடி

14.

பெருவிரைவு ரயில் நிலையத்தின் அருகில் ________________ பேரங்காடி, இவ்வட்டாரத்திலேயே

பெரிதாக இருக்கும்.

a)

கட்டிய

b)

கட்டப்படுகிற

15.

கனத்த மழையோடு ________________ காற்றும் வீசியதால் பல மரங்கள் வேரோடு சாய்ந்தன.

a)

கடுமையான

b)

பலத்த