wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Bahasa Tamil

Total questions: 15

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

கீழ்க்காணும் செய்வினை வாக்கியத்திற்கு ஏற்ற செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க. (யூ.பி.எஸ்.ஆர் 2018)


"பீர்பாலின் நகைச்சுவை அக்பர் சக்கரவர்த்தியைப் பெரிதும் கவர்ந்தது'.

a)

அக்பர் சக்கரவர்த்தி பீர்பாலின் நகைச்சுவையால் பெரிதும் கவரப்பட்டார்.

b)

அக்பர் சக்கரவர்த்தியின் நகைச்சுவையால் பீர்பால் பெரிதும் கவரப்பட்டார்.

c)

பீர்பால் அக்பர் சக்கரவர்த்தியின் நகைச்சுவையால் பெரிதும் கவரப்படுவார்.

d)

பீர்பால் நகைச்சுவையால் அக்பர் சக்கரவர்த்தி பெரிதும் கவரப்படுவார்.

2.

கொடுக்கப்பட்டுள்ள செய்வினை வாக்கியத்திற்குச் சரியான செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.                                     (யூ.பி.எஸ்.ஆர் 2012)

அகத்திய முனிவர் நிறைய மருத்துவ நூல்களை எழுதினார்.

a)

மருத்துவ நூல்களை அகத்திய முனிவர் நிறைய எழுதினார்.

b)

நிறைய மருத்துவ நூல்கள் அகத்திய முனிவரால் எழுதப்பட்டன.

c)

அகத்திய முனிவர் எழுதியவை நிறைய மருத்துவ நூல்கள்.

d)

நிறைய மருத்துவ நூல்கள் அகத்திய முனிவரால் எழுதியவை.

3.

கீழ்க்காணும் செய்வினை வாக்கியத்திற்குப் பொருத்தமான செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க. (யூ.பி.எஸ்.ஆர் 2013)


வடலூரில் வள்ளலார் சத்திய ஞானசபையை நிறுவினார்.

a)

சத்திய ஞானசபை வள்ளலாரால் வடலூரில் நிறுவப்பட்டது.

b)

வள்ளலாரின் வடலூரில் நிறுவப்பட்டது சத்திய ஞானசபை.

c)

சத்திய ஞானசபை வள்ளலாரால் நிறுவப்பட்டது வடலூரில்.

d)

வடலூரில் வள்ளலாரால் நிறுவப்பட்டது சத்திய ஞானசபை.

4.

கீழ்க்காணும் வாக்கியங்களில் சரியான செய்வினை மற்றும் செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

குரங்கு பழத்தைப் பறித்தது.

குரங்கு பழத்தால் பறிக்கப்பட்டது.

b)

தேன்மொழி பூ மாலை தொடுத்தாள்.

பூ மாலை தேன்மொழியைத் தொடுத்தது.

c)

துளசி நடனம் ஆடினாள்.

நடனம் துளசியை ஆடியது.

d)

மாதவன் புல்லாங்குழல் ஊதினான்.

புல்லாங்குழல் மாதவனால் ஊதப்பட்டது.

5.

கீழ்க்காணும் வாக்கியங்களில் சரியான செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

மாதவியும் மாலனியும் கட்டுரை எழுதினர்.

b)

அண்ணன் மீன் தொட்டியைச் சுத்தமாகக் கழுவினான்.

c)

நாட்டுப்பற்று நாடகக் கலைஞர்களால் வளர்க்கப்பட்டது.

d)

பஞ்சப்பாண்டவர்கள் மன்னன் பாண்டுவின் ஐந்து மகன்கள் ஆவர்.

6.

கீழ்க்காண்பனவற்றுள் எது செய்வினை வாக்கியத்திற்கு ஏற்ற செயப்பாட்டுவினை வாக்கியம் அல்ல ?

a)

செய்வினை = தமிழரசி பாடம் செய்தாள்.


செயப்பாட்டுவினை = பாடம் தமிழரசிக்குச் செய்யப்பட்டது.

b)

செய்வினை = குமணன் மாம்பழம் பறித்தான்.

செயப்பாட்டுவினை = மாம்பழம் குமணனால் பறிக்கப்பட்டது.

c)

செய்வினை = ஆசிரியர் அழகியைப் பாராட்டினார்.


செயப்பாட்டுவினை = அழகி ஆசிரியரால் பாராட்டப்பட்டார்.

d)

செய்வினை = அரசு கோவில் கட்டினார்.


செயப்பாட்டுவினை = கோவில் அரசரால் கட்டப்பட்டது.

7.

செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

அதிவீரராம பாண்டியர் வெற்றிவேற்கை எழுதினார்.

b)

ஆசிரியர் மாணவர்களுக்கு ஒழுக்கம் தொடர்பாக விளக்கம் அளித்தார்.

c)

கம்பர் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சுற்றுலா மேற்கொண்டனர்.

d)

பழங்கள் பழத்தோட்ட உரிமையாளரால் மாணவர்களுக்குக் கொடுக்கப்பட்டது.

8.

கீழ்க்காணும் செயப்பாட்டுவினை வாக்கியத்திற்கு ஏற்ற செய்வினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.


நடனம் நடனக் கலைஞர்களால் சிறப்பாக ஆடப்பட்டது.

a)

கலைஞர்கள் நடனத்தைச் சிறப்பாக நடனம் ஆடினர்.

b)

நடனத்தை சிறப்பான நடனக் கலைஞர்கள் ஆடினர்.

c)

சிறப்பான நடனத்தை நடனக் கலைஞர்கள் ஆடினர்.

d)

நடனக் கலைஞர்கள் நடனத்தைச் சிறப்பாக ஆடினர்.

9.

கீழ்க்காணும் வாக்கியங்களில் சரியான செய்வினை மற்றும் செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

வைரமுத்து கவிதை எழுதினார்.


கவிதை வைரமுத்துவால் எழுதப்படும்.

b)

மாணவர்கள் வானத்தில் பட்டம் விட்டனர்.


பட்டம் வானத்தில் மாணவர்களால் விடப்படுகின்றது.

c)

கவிநயா மர்மக் கதைப்புத்தகத்தை வாசிக்கிறாள்.


மர்மக் கதைப்புத்தகம் கவிநயாவால் வாசிக்கப்படுகிறது.

d)

அகிலன் மிதிவண்டியை வேகமாகச் செலுத்தினான்.


அகிலனால் மிதிவண்டி வேகமாகச் செலுத்தப்பட்டன.

10.

கொடுக்கப்பட்ட செய்வினை வாக்கியத்திற்கு ஏற்ற செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.


ஜெயலெட்சுமி தோட்டத்தில் பூச்செடிகளை நட்டாள்.

a)

தோட்டத்தில் பூச்செடிகளை ஜெயலெட்சுமி நட்டாள்.

b)

பூச்செடிகள் ஜெயலெட்சுமியால் தோட்டத்தில் நடப்பட்டது.

c)

ஜெயலெட்சுமி பூச்செடிகளைத் தோட்டத்தில் நட்டாள்.

d)

பூச்செடிகளால் ஜெயலெட்சுமி தோட்டத்தில் நடப்பட்டாள்.

11.

செய்வினை வாக்கியத்தைத் தேர்வு செய்க.

a)

அனிதா பரதநாட்டிய வகுப்பிற்குச் செல்வாள்.

b)

தங்க நகைகள் பொற்கொல்லனால் செய்யப்படுகின்றன.

c)

வீட்டு வேலை அம்மாவால் செய்யப்பட்டது

d)

கூட்டுப்பணி பொதுமக்களால் செய்யப்பட்டது.

12.

செயப்பாட்டுவினையாக வாக்கியத்தை மாற்றுக.

2) அப்பா அழகிய ஓவியத்தை வீட்டில் மாட்டினார்.

a)

அழகிய ஓவியம் வீட்டில் மாட்டப்பட்டது.

b)

அழகிய ஓவியம் அப்பாவால் வீட்டில் மாட்டப்பட்டது.

c)

மாட்டப்பட்டது அழகிய ஓவியம் வீட்டில் அப்பாவால்.

d)

ஓவியம் அப்பாவால் வீட்டில் மாட்டப்பட்டது.

13.

சரியான செயப்படுப்பொருள் வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

தமிழர்கள் தீபாவளி பண்டிகையை ஒவ்வொரு வருடமும் கொண்டாடுவார்கள்.

b)

கடிதம் நிலா எழுதினாள்.

c)

பரிசுகள் அனைத்தும் தலைமையாசிரியரால் வழங்கப்படும்.

d)

மாணவர்கள் கருத்தைக் கூறினார்கள்.

14.

சரியான செய்வினை வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.

a)

மாமாவால் வாங்கப்பட்ட பழங்களைச் சுவைத்தோம்

b)

வீட்டுப்பாடங்களை ஆசிரியரால் கொடுக்கப்பட்டது.

c)

காவியா தங்க மீன்களை வளர்ப்பாள்

15.

செயப்படுப்பொருளாக வாக்கியத்தை மாற்றுக.

மாணவர்கள் தேசிய கீதம் பாடுகிறார்கள்.

a)

தேசிய கீதம் மாணவர்கள் பாடுகிறார்கள்

b)

தேசிய கீதம் மாணவர்களால் பாடப்பட்டது.

c)

பாடப்பட்டது மாணவர்களால் தேசிய கீதம்.