wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

PT 3 TAMIL

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

“ இங்கு ஏற்பாடு செய்யப்பட்ட தமிழர் திருநாள் எவ்வித _________________ இன்றி நடைபெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்,” என்று தலைவர் தனது தலைமை உரையில் கூறினார்.

a)

தங்கு தடை

b)

உயர்வு தாழ்வு

2.

கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் மிகப் பொருத்தமான இணைமொழியைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

திருமதி மலர் தன் இல்லத்திற்கு வந்த உறவினர்களை உள்ளும் புறமும் மலர வரவேற்றாள்.

b)

திரு அறிவழகன் தன் மகளின் திருமணத்தைச் சீரும் சிறப்புமாக நடத்தினார்.

3.

சரியான இணையைத் தெரிவு செய்க.

a)

நாணிக்கோணி – தலை குனிந்து

b)

கள்ளங்கபடு – வஞ்சக எண்ணம்

4.

பாராலிம்பிக் விளையாட்டுப்போட்டியில் நம் நாட்டைப் பிரதிநிதித்து அம்பு எய்தும் போட்டியில் தங்கம் வென்ற சுரேசின் மறைந்திருந்த திறமை இன்று மலேசியர்கள் அனைவராலும் அறியப்பட்டது

a)

இலைமறை காய் போல

b)

உள்ளங்கை நெல்லிக்கனி போல

5.

குழந்தையைப் பராமரிக்க வேண்டிய பெற்றோர்களே அவர்களைக் கொடுமைப்படுத்தும் செயல் _________________ இருக்கிறது.

a)

இலவு காத்த கிளி போல

b)

வேலியே பயிரை மேய்ந்தாற் போல

6.

திருநாள் காலங்களில் வீட்டு வாசலில் கோலம் போடும் பழக்கத்தைத் தமிழர்கள் நெடுநாளாகக் கடைப்பிடித்து வருகின்றனர்

a)

வாழையடி வாழை

b)

வீடு வாசல்

7.

மலர்விழி தன் திருமணத்தை மிகவும் ஆடம்பரமாகச் செய்தே தீர வேண்டும் எனத் தன் பெற்றோரிடம் வாதிட்டாள்.

a)

இடித்துரைத்தல்

b)

உடும்புப் பிடி

8.

அன்பழகன் தொடக்கப் பள்ளி வரை மட்டுமே கல்வி கற்றிருப்பதால் அவன் கருத்துகளுக்கு யாரும் செவிசாய்ப்பதில்லை.

a)

அரைப்படிப்பு

b)

இடித்துரைத்தல்

9.

திருமதி மாலதி தனித்து வாழும் தாய். அவர் தன் மகன் சிவாவின் உயர்வுக்காக தன்னையே அர்ப்பணித்தார். ஆனால், சிவாவோ தன் தாயாரின் முதுமை காலத்தில் அவரை முதியோர் காப்பகத்தில் சேர்த்தான்.

a)

பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு

b)

அடாது செய்பவன் படாது படுவான்

10.

வீட்டிற்கு வரும் உறவினரை _____________________ மலர வரவேற்பது தமழர்களின் உயரிய பண்பாடாகும்.

a)

உயர்வு தாழ்வு

b)

அகமும் புறமும்