NEW
Font size
Worksheetsஇலக்கணம் (set 3)
Total questions: 20
Worksheet time: 10mins
இமய மலையில் ஏறும் போது உறை ___________யின் தோற்றம் கண்ணுக்கு விருந்தாக அமைந்தது.
பனி
பணி
வீட்டுப் _________ப்பெண்களை அன்பாகவும் பண்பாகவும் நடத்துவதுதான் மனித நேயமாகும்.
பனி
பணி
அவ்வுணகத்தில் வாழை __________ச் சாப்பாடு சுவையாக இருந்ததால் வியாபாரம் சிறப்பாக இருந்தது.
இலை
இழை
தான் தவறு _________த்துவிட்டதாக நினைத்து அவன் வருந்தினான்.
இலை
இழை
திருக்குறளுக்கு _________ எழுதிய ஆசிரியர்களுள் டாக்டர் மு. வரதராசனாரின் தெளிவுரை மாணவர்களுக்கு எளிமையாக உள்ளது.
உரை
உறை
கால் __________ அணியாமல் பள்ளிக்கு வந்த மாணவர்களைக் கட்டொழுங்கு ஆசிரியர் கண்டித்தார்.
உரை
உறை
_______ தன் தும்பிக்கையால் மரங்களைச் சாய்த்தது.
கரி
கறி
அம்மா சமைத்த ______யை நான் சோற்றில் ஊற்றி சாப்பிட்டேன்.
கரி
கறி
நாய் தன் எஜமானரைக் கண்டதும் வாலை ஆட்டிக்கொண்டு வேகமாகக் _______த்தது.
குரை
குறை
அதிக விலையில் விற்கப்பட்ட அந்தப் பொம்மையின் விலையைக் ____________க்கும்படி அம்மா பேரம் பேசினார்.
குரை
குறை
பலகாரங்களில் _____________ அதிகம் சேர்த்ததால் இனிப்பாக இருந்தது.
வெல்லத்தை
வெள்ளத்தை
கனத்த மழை பெய்ததால் அக்கிராமத்தில் ___________ ஏற்பட்டது.
வெல்லம்
வெள்ளம்
அம்____________ கனிகள் காய்த்துக் தொங்கின.
மரத்தில்
மறத்தில்
_________ கொண்ட வீரர்கள் போர்க்களத்தில் துணிச்சலாகச் போரிட்டனர்.
மரம்
மறம்
மித்திலன் தன் ____________யில் அணியிருந்த நீல நிறத் தொப்பி பார்ப்பதற்கு அழுக்காக இருந்தது.
தலை
தழை
அப்பா __________க் கொண்டு கத்தியைத் தீட்டினார்.
அரத்தை
அறத்தை
முத்து தன் பண்த்தை ஏழைகளுக்கு _______________க் கொடுத்து உதவினார்.
அரமாக
அறமாக
சரியாகத் தேய்த்துக் குளிக்காவிடில் __________ சொறி சிறங்கு ஏற்படும்.
தோல்
தோள்
மாணவர்கள் தங்களது புத்தகப்பையைத் __________ சுமந்து சென்றனர்.
தோலில்
தோளில்
ஆட்டு மந்தைகள் செடி கொடிகளில் பச்சை பசேலென்று இருந்த ______ களைத் தின்றன.
தலை
தழை
