wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

புதிர்ப்போட்டி ஆண்டு 6, ஆக்கம் சு.கமலா தேவி.

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

படத்திற்குப் பொருத்தமான பெயரெச்சத்தைத் தெரிவு செய்க.

a)

வேகமான ஓட்டம்

b)

ஓடி முடித்தான்

c)

ஓடிய பையன்

2.

முயற்சிக்குத் தொடர்புடைய கொன்றை வேந்தன் யாது?

a)

ஏவா மக்கள் மூவா மருந்து

b)

ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு

c)

திரை கடல் ஓடியும் திரவியம் தேடு

3.

அம்மா வாங்கி வந்த தங்க நகைகள்______________ எனச் செந்நிறமான ஒளியுடன் மின்னின.

a)

பள பள

b)

தக தக

c)

மினு மினு

4.

கீழ்க்காண்பனவற்றுள் எது இணைமொழி அல்ல?

a)

அள்ளி விடுதல்

b)

பேரும் புகழும்

c)

ஒளிவு மறைவு

5.

மேற்காணும் படம் உணர்த்தும் புதிய ஆத்திச்சூடியைத் தெரிவு செய்க.

a)

ஊண்மிக விரும்பு

b)

உடலினை உறுதி செய்

c)

ஓய்தல் ஒழி

6.

தமிழில் உயிர்மெய்நெடில் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

7

b)

60

c)

126

7.

அடைப்புக்குறியிலுள்ள சொல்லிற்கான எதிர்ச்சொல்லைத் தெரிவு செய்க. (வாகை) சூட வயது ஒரு தடையல்ல.

a)

தோல்வி

b)

வெற்றி

c)

இன்பம்

8.

ஆனமுதலில் அதிகஞ் செலவானால் என்ற நல்வழிக்கு ஏற்புடைய இணைமொழி யாது?

a)

ஆடை அணிகலன்

b)

வரவு செலவு

c)

தான தர்மம்

9.

தமிழ் இலக்கண இலக்கிய துறைகளில்______________ பேராசிரியர் திரு.திருமாறன் இன்று தாம் கற்ற அறிவை மற்றவர்களுக்கும் போதித்து வருகிறார்.

a)

ஆழம் பார்த்த

b)

வெளுத்து வாங்கிய

c)

கரை கண்ட

10.

பிரித்தெழுதுக : தென்னந்தோப்பு

a)

தென்னம் + தோப்பு

b)

தென்னை + தோப்பு

c)

தென்மை + தோப்பு

11.

________________ என்பது உயிர்மெய்யெழுத்தை முதலாகக் கொண்டு தொடங்கும் சொல்லின் முன் வரும். ஆனால், ______________ என்பது உயிர் எழுத்த முதலாகக் கொண்டு தொடங்கும் சொல்லின் முன் வரும்.

a)

ஒரு, ஓர்

b)

ஓர், ஒரு

c)

அது, ஓர்

d)

அது, ஒரு

12.

நான்காம் வேற்றுமை உருபைக் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

மாணிக்கம் ரப்பர் மரம் சீவும் தொழிலாளி.

b)

மாணிக்கத்துக்கு ஏணிக்கோடு மரங்கள் கொடுக்கப்பட்டன.

c)

ரப்பர் மரப்பட்டைகளைச் சீவியதும் ரப்பர் பால் வழிந்தது.

d)

ரப்பர் பாலிருந்து பல பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.

13.

பின்வருவனவற்றுள் எது தோன்றல் விகாரத்தைப் பற்றிய சொற்கள் அல்ல?

a)

அத்தலைவன்

b)

பூஞ்சோலை

c)

கண்ணிமை

d)

கற்றூண்

14.

தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல்---------------ஆகும்

a)

திருக்குறள்

b)

தொல்காப்பியம்

c)

நன்னூல்

d)

சிலப்பதிகாரம்

15.

அறவினை

a)

அறம் + வினை

b)

அற + வினை

16.

சர்வாதிகாரி

a)

சர்வ + அதிகாரி

b)

சர்வம் + அதிகாரி

17.

அமிர்தாஞ்சனம்

a)

அமிர்த + ஆஞ்சனம்

b)

அமிர்தம் + அஞ்சனம்

18.

குணானுபவம்

a)

குணா + அனுபவம்

b)

குண + அனுபவன்

19.

படம் குறிக்கும் கொன்றை வேந்தனைத் தேர்ந்தெடு.

a)

ஐயம் புகினும் செய்வன செய்

b)

ஆலயம் தொழுவது சாலவும் நன்று

c)

தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை

d)

சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்.

20.

தந்தையின் சொல்லைவிட மேலான அறிவுரை கிடையாது.

a)

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.

b)

மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்.

c)

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.

d)

சூதும் வாதும் வேதனை செய்யும்.

21.

சூதாடுதலும் தேவையற்ற வாக்குவாதம் செய்தலும் துன்பத்தையே தரும்.

a)

ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு.

b)

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை

c)

சூதும் வாதும் வேதனை செய்யும்

d)

ஐயம் புகினும் செய்வன செய்.

22.

இவற்றில் எது கொன்றை வேந்தன் அல்ல?

a)

ஆலயம் தொழுவது சாலவும் நன்று

b)

வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்

c)

திரை கடல் ஓடியும் திரவியம் தேடு

d)

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

23.

சரியான கொன்றை வேந்தனைத் தேர்ந்தெடு.

a)

ஏவா மக்கள் மூவா மருந்து.

b)

ஐயம் புகினும் செய்வன செய்.

c)

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்.

d)

ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு.

24.
கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் படர்க்கைச் சொல் ஏற்றுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
a)
தாத்தா தோட்டத்தில் இருந்து இரண்டு வாழைத்தார் வெட்டி வந்தார்.
b)
உன் அண்ணன் இரு மொழிகளில் அறிவு பெற்றவன்.
c)
என் உடல் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும்.
d)
நம் நாட்டில் பலவகை இனம் வாழ்கிறது.
25.
மாணவர்களின் படைப்பில் காணப்பட்ட __________ களை ஆசிரியர் சுட்டிக் காட்டினார்.
a)
அருமை பெருமை
b)
குறை நிறை
c)
கல்வி கேள்வி
d)
நன்மை தீமை