NEW
Font size
Worksheetsதமிழ் மொழி ஆண்டு 5
Total questions: 10
Worksheet time: 5mins
கீழ்க்காணும் சொல்லுக்குப் பொருந்தாதவற்றைத் தெரிவு செய்க.
'வரைந்தனர்'
A. பன்மை
B. உயர்திணை
C. பலவின்பால்
D. இறந்தகாலம்
கண்ணகி அரண்மனைக்குச் சென்று தன் _________________ உடைத்தாள்.
A. காற்சிலம்பு
B. காற்சிலம்புடன்
C. காற்சிலம்பை
D. காற்சிலம்பில்
பொன் + தாமரை =
A. பொன்தாமரை
B. பொன்னாமரை
C. பொந்தாமரை
D. பொற்றாமரை
கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் பிழையான இணையைத் தெரிவுசெய்க.
A. மெய் எழுத்துகள் = 18
B. உயிர்மெய் நெடில் எழுத்துகள் = 150
C. ஆய்த எழுத்து = 1
D. உயிர்மெய் குறில் எழுத்துகள் = 5
கோடிட்ட சொற்கள் குறிக்கும் இடத்தைத் தெரிவு செய்க.
"அவர்கள் இருவரும் என்னைப் பார்க்க நாளைப் பினாங்கிலிருந்து வருகின்றனர்," என்று அம்மா கூறினார்.
A. முன்னிலை , படர்கை
B. படர்கை , முன்னிலை
C. முன்னிலை , தன்மை
D. படர்கை , தன்மை
" மாணவர்களே, நம் வாழ்க்கைச் சூழலில் தற்போது அனைவரும் துரித உணவை விரும்புகிறோம். இதுரித உணவால் நம் உணவால் உடலுக்குக் கெடுதி" என்றார் ஆசிரியர்.
இவ்வாக்கியத்திற்கு ஏற்ற ஆத்திச்சூடி என்ன?
A. ஔடதம் குறை
B. ஈகை திறன்
C. உடலினை உறுதிசெய்
D. ஊண்மிக் விரும்பு
மூன்றாம் வேற்றுமை உருபைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
A. நம் நாட்டின் பொருளாதரம் வளர்ச்சியடைந்துள்ளது.
B. யானையினது தந்தம் சாலையோரத்தில் உடைந்து கிடந்தது.
C. பாடல்கள் கவிஞர் வைரமுத்துவால் இயற்றப்பட்டது.
D. மனுநீதிச் சோழன் தம் மகனைத் தேரில் ஏற்றிக் கொன்றார்.
சரியான இடைச்சொல்லைத் தேர்ந்தெடுக. அகிலா கடுங்கோபத்துடன் இருப்பதை அறிந்த நகுலன் __________________ அவளின் கோபத்தைக் கிளறினான்.
A. அதற்காக
B. எனினும்
C. மேலும்
D. என்றாலும்
பின்வருவனற்றுள் பொருந்தாத இணையைத் தெரிவு செய்க.
A. அள்ளி இறைத்தல் = அளவுக்கு மேல் செலவழித்தல்.
B. பேரும் புகழும் = சிறப்பு / உயர்வு/ மேன்மை
C. கம்பி நீட்டுதல் = பிறருடைய கவனதிலிருந்து தப்பித்துப் போய் விடுதல்
D. மேடு பள்ளம் = சமமற்ற நிலப்பகுதி
சரியாக வலிமிகுந்துள்ள வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.
எங்களைத் தவிக்கும்படிச் செய்துவிட்டு நீ பாட்டுக்குப் போய்விட்டாயே !
எங்களைத் தவிக்கும்படி செய்துவிட்டு நீ பாட்டுக்குப் போய்விட்டாயே !
