wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

செய்ந்நன்றி அதிகாரம்

Total questions: 10

Worksheet time: 19mins

Name
Class
Date
1.

பின்வரும் பொருளுக்கு ஏற்ற திருக்குறளைக் கண்டறிக.


செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்

வானகமும் ஆற்றம் அரிது

a)

இன்ன பயன் கிடைக்கும் என்று ஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிட பெரியதாகும்

b)

உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும்

c)

தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.

2.

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது


வண்ணமிடப்பட்ட சொல்லின் பொருள் யாது?

a)

உலகம்

b)

வானம்

c)

அறிவு

3.

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்

நன்மை கடலின் பெரிது


என்ற திருக்குறளின் வாயிலாக திருவள்ளுவர் ஒருவர் செய்த நன்மையின் அளவு அதை விடப் பெரியது என்கிறார்?

a)

காற்று

b)

கடல்

c)

நிலம்

4.

திணைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்

a)

துன்பத்துள் துப்பாயார் நட்பு

b)

நன்மை கடலின் பெரிது

c)

அன்றே மறப்பது நன்று

d)

கொள்வர் பயன்தெரி வார்

5.

பின்வரும் பொருளுக்கு ஏற்ற திருக்குறள் எது?


கைமாறாகச் செய்யும் உதவி முன் செய்த உதவியின் அளவை உடையது அன்று, உதவி செய்யப்பட்டவற்றின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும்.

a)

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்

விழுமந் துடைத்தவர் நட்பு

b)

உதவி வரைத்தன்று உதவி உதவி

செயப்பட்டார் சால்பின் வரைத்து

6.

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க

துன்பத்துள் துப்பாயார் நட்பு


என்ற திருக்குறளின் வழி திருவள்ளுவர் கூறும் கருத்து யாது?

a)

குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கக்கூடாது

b)

ஒருவரின் உதவி கடலை விடப் பெரியது

c)

துன்பக் காலத்தில் உதவியர்களின் நட்பை என்றும் விடக்கூடாது

d)

ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை

7.

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்

விழுமந் துடைத்தவர் நட்பு


என்ற திருக்குறளின் பொருள் யாது?

a)

ஒருவர் முன் செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்‌பொழுதே மறந்து விடுவது அறம் ஆகும்.

b)

தம்முடைய துன்பத்தைப் போக்கி உதவியவரின் நட்பைப் பல்வேறு வகையான பிறவியிலும் மறவாமல் போற்றுவர் பெரியோர்.

8.

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

அன்றே மறப்பது நன்று


இதன்வழி திருவள்ளுவர் கூறும் கருத்து

a)

ஒருவர் செய்த உதவியை சிறியதாக இருப்பினும், அதன் தன்மை உலகை விட பெரியதாகும்.

b)

ஒருவர் நமக்கு செய்த நன்றியை மறப்பது சரியல்ல

c)

ஆனால் அவர் செய்த தீமையை உடனே மறப்பது அறமாகும்

9.

கொன்றன்ன இன்னா செய்யினும் அவர்செய்த

______________________________________

a)

அன்றே மறப்பது நன்று

b)

ஒன்றுநன்று உள்ளக் கெடும்

c)

செய்ந்நன்றி கொன்ற மகற்கு

10.

எந்நன்றி கொன்ரார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு


என்ற திருக்குறளில் எப்பேற்பட்ட மனிதர்க்கு உய்வு இல்லை என்கிறார் திருவள்ளுவர்

a)

அன்பை மறந்தவர்

b)

தன்மானத்தை மறந்தவர்

c)

பிறர் உதவியை மறந்தவர்