wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஒலி வேறுபாடு_4

Total questions: 20

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

என் பாட்டி தினமும் காலையில் வானொலி நிகழ்ச்சிகளை விரும்பிக் கேட்பார். அவர் இன்று காலை ____________ நகைச்சுவைத் துணுக்குகளைக் கேட்டு மகிழ்ந்தார். 

a)

ஒளிபரப்பான

b)

ஒலிபரப்பான

2.

மல்லிகா பொங்கல் தினத்தன்று வண்ணப் பொடிகளைக்கொண்டு வாசலில் பெரிய ____________ போட்டாள். அதன் அழகைக் கண்ட பக்கத்துவீட்டுக்காரர் அவளைப் பாராட்டினார்.                                                     

a)

கோலம்

b)

கோளம்

3.

“மீனா, உன் தம்பி பேனாவைக் கண்டால் எடுத்துக் கிறுக்குவான். அதை அவன் கண்ணில் படாமல் ____________ வை,” என்றார் என் தந்தை.              

a)

ஒழித்து

b)

ஒளித்து

4.

புறா ஒன்று வேடன் வைத்த ____________ ஒன்றில் சிக்கிக்கொண்டது. அதைக் கண்ணுற்ற வாசுகி அதனை உடனே விடுவித்தாள்.

a)

பொறி

b)

பொரி

5.

என் பள்ளிக்கு அருகே இருக்கும் அங்காடி நிலையத்தில் இளையர்கள் கூடுவது வழக்கம். நேற்று அவர்கள் கூடியபோது, கருத்து வேற்றுமையின் காரணமாக அவர்களுக்கிடையே ____________ ஏற்பட்டது.

a)

கழகம்

b)

கலகம்

6.

தூய்மையற்ற சுற்றுச்சூழலால் எலிகளின் தொல்லை அதிகரித்தது. பலர் பெருமுயற்சி செய்து ____________ பதுங்கியிருந்த எலிகளைப் பிடித்தனர்.

a)

வலைகளில்

b)

வளைகளில்

7.

மாறன் நோயின் காரணமாகப் பல நாள்கள் சரிவர உணவு உண்ணவில்லை. அதனால்,  அவன் ____________ இழந்து காணப்பட்டான்.                         

a)

வலு

b)

வழு

8.

என் அம்மா திருமணத்திற்குக் கிளம்பியபோது அவருடைய மூக்குத்தி கீழே விழுந்துவிட்டது. அதை ____________ முடுக்கெல்லாம் தேடியும் கிடைக்கவில்லை.              

a)

மூளை

b)

மூலை

9.

ஆசிரியர், தமிழ் மாதங்களைப் பற்றிக் கற்பித்துக் கொண்டிருந்தார். அப்போது நான்    

அவரிடம் என் பிறந்தநாள் ____________ மாதத்தில் வருவதாகக் கூறினேன்.

a)

ஆணி

b)

ஆனி

10.

ஏழைப் புலவர் ஒருவர் மன்னரைக் காணச் சென்றிருந்தார். மன்னர் புலவரின் நிலை அறிந்து மனம் ____________ அவருக்கு உதவிக்கரம் நீட்டினார்.

a)

இறங்கி

b)

இரங்கி

11.

தமிழ்மொழி கலாசார முகாமில் பல பாரம்பரிய விளையாட்டுகள் இடம்பெற்றன. நான்  

____________அடிக்கும் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றேன்.

a)

உரி

b)

உறி

12.

மாலதிக்குச் சிவப்பு ரோஜா என்றால் ____________ ஆசை. அதனால், அவள் தோட்டத்தில் ஒரு ரோஜாச் செடியை நட்டு வைத்தாள்.

a)

கொள்ளை

b)

கொல்லை

13.

நாட்டுத் தலைவர்கள் ____________ தவறாது மக்களை நல்வழிப்படுத்தும் ஆற்றல் உடையவர்களாக இருக்க வேண்டும். அத்தகையோரை மக்கள் மதித்துப் போற்றுவர்.  

a)

நெரி

b)

நெறி

14.

தாய்லாந்து நாட்டில் நீளமான ____________ கொண்டு ஒருவகை நடனம் ஆடப்படுகிறது. அது சுற்றுப்பயணிகளை வெகுவாகக் கவர்கிறது.           

a)

கோல்களை

b)

கோள்களை

15.

முதியோர்கள் மின் மோட்டார் சைக்கிள்களைத் தற்போது அதிகம் பயன்படுத்துகிறார்கள். இவற்றின் மூலம் அவர்கள் தங்கள் குடியிருப்பு வட்டாரத்தில் ____________ வருகிறார்கள்.

a)

வலம்

b)

வளம்

16.

அல்லி கால் இடறிக் கீழே விழுந்தாள். நல்ல ____________! அவளுக்குப் பலமான காயம் ஏதும் ஏற்படவில்லை.

a)

வேலை

b)

வேளை

17.

புனிதன் தன் பிறந்தநாளைக் கொண்டாடினான். அப்போது அவனுடைய நெருங்கிய தோழர்கள் அவன் பெயர் ____________ பேனாவைப் பரிசாகக் கொடுத்தார்கள். 

a)

பொறிக்கப்பட்ட

b)

பொரிக்கப்பட்ட

18.

என் தாயார் மல்லிகை மலர்களை மாலையாகத் தொடுத்துக்கொண்டிருந்தார். அப்போது மலர்களின் ____________ வீடெங்கும் பரவியது.

a)

மணம்

b)

மனம்

19.

இளநீர் தாகத்தை ____________ உற்சாகம் அளிக்கும். அதனால், வெயில் காலங்களில் மக்கள் அதை அதிகம் வாங்கிப் பருகுகிறார்கள்.

a)

தனித்து

b)

தணித்து

20.

இவ்வாண்டு மே 22-ஆம் தேதியன்று யூஸ் ரீனா என்னும் சிங்கப்பூர்ப் பெண்மணி எவரஸ்ட் மலை உச்சியை அடைந்தார். அவரது ____________ முயற்சியை அனைவரும் பாராட்டினார்கள்.

a)

அறிய

b)

அரிய