wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கருத்தறிதல் கேள்விகளும் பதில்களும்

Total questions: 5

Worksheet time: 17mins

Name
Class
Date
1.

 

ராமு பாலாவிடம் என்ன கூறினான்?

a)

ராமு பாலாவிடம் தான் வகுப்பறைக்குச் சென்று தன் புத்தகத்தை எடுத்துக்கொண்டு வருவான் என்று கூறினான்.

b)

ராமு பாலாவிடம் 'நான் வகுப்பறைக்குச் சென்று என் புத்தகத்தை எடுத்துக்கொண்டு வருகிறேன்' என்று கூறினான்

2.

ராமு எப்போது பாலாவின் பணத்தைத் திருடினான்?

a)

 

பாலாவின் மேசையில் பத்து வெள்ளி இருப்பதைக் கண்டு பேராசை கொண்டான். அப்போது அவன் பாலாவின் பணத்தைத் திருடினான்.

b)

ராமு வகுப்பறைக்குள் நுழைந்தவுடன் ராமு பாலாவின் மேசையில் பத்து வெள்ளி இருப்பதைக் கண்டு பேராசை கொண்டான். அதனால் அவன் அதைத் திருடினான்.

3.

ராமு திருந்தியதற்கான காரணம் என்ன?

a)

ராமு திருந்தியதற்கான காரணம் ராமுவிடம், ' நீ எப்போதும் நேர்மையாக இருக்க வேண்டும்' என்று அறிவுரை கூறினார். அதைக் கேட்டு ராமு தன் தவற்றை உணர்ந்தான்.

b)

ராமுவிடம் அவன் எப்போதும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று ஆசிரியர் அறிவுரை கூறினார். அதனால், ராமு திருந்தினான்.

4.

ராமு திருந்திவிட்டான் என்பதை எவ்வாறு அறியலாம்?

a)

ராமு தன் தவற்றை உணர்ந்து ஆசிரியரிடமும் மாதவனிடமும் மன்னிப்புக் கேட்டான்.

b)

ராமு திருந்திவிட்டான். ராமு தன் தவற்றை உணர்ந்தான். உடனே, அவன் ஆசிரியரிடமும் மாதவனிடமும் மன்னிப்புக் கேட்டான். இவ்வாறு அறியலாம்.

5.

உன்னை ராமுவாகக் கற்பனை செய்துகொள். மாதவன் உனக்கு ஒரு நல்ல நண்பனாக இருந்தான் என்பதை விளக்கும் இரண்டு செயல்களைச் சுட்டிக்காட்டி அவனுக்கு நன்றி தெரிவித்து குறிப்பு எழுது.

அன்புள்ள ராமு நீ எனக்கு ஒரு நல்ல நண்பனாக இருந்தாய். அதற்கு நான் உன்னிடம் நன்றி தெரிவிக்கிறேன். நான் வகுப்பறையில்....

a)

பாலாவின் மேசையில் பத்து வெள்ளி இருப்பதைக் கண்டு பேராசை கொண்டான். அதனால் அவன் அதைத் திருடினான். திருடிய பணத்தை அவன் தனது பள்ளிப்பையில் வைத்தான். 'திருடுவது தவறு!' என்று மாதவன் கூறினான். மாதவன் அதற்கு, ''நீ தவற்றை உணர்ந்துவிட்டாய்! நீ திருடியதைப் பற்றி யாரிடமும் கூற மாட்டேன்' என்று உறுதி அளித்தான்.

b)

திருடிய பணத்தை என் பள்ளிப்பையில் வைத்தபோது நீ திருடுவது தவறு என்று கூறினாய். மேலும், நான் தவற்றை உணர்ந்துவிட்டேன் என்பதால் நான் திருடியதைப் பற்றி யாரிடமும் கூற மாட்டாய் என்று உறுதி அளித்தாய்.