wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பழமொழி

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

மாவளன் இடைநிலைப் பள்ளியில் படித்துக் கொண்டே பேரங்காடி ஒன்றில் பகுதி நேர வேலை செய்தான். இதனால், படிப்பில் சரியான கவனம் செலுத்த முடியவில்லை. மேலும், வேலையிலும் சோர்ந்து போனான்.

a)

வெள்ளம் வருமுன் அணைப் போடு

b)

ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்

c)

ஆழம் அறியாமல் காலை விடாதே

2.

தொழிற்சாலையில் வேலை செய்யும் திரு.குணாளன் தம் இரு பிள்ளைகளுக்காகப் பணத்தைச் சேமித்து வந்தார். பிள்ளைகளின் எதிர்காலக் கல்வி சிறப்புற அமைய வேண்டும் என்ற எண்ணத்திலும் பல இன்னல்களைத் தவிர்க்கவும் தம்மை தயார்படுத்திக் கொண்டார்.

a)

வெள்ளம் வருமுன் அணைப் போடு

b)

ஆழம் அறியாமல் காலை விடாதே

c)

ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்

3.

நண்பர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி, திலகன் தன் பெற்றோர் விட்டுச் சென்ற சொத்துகளை எல்லாம் விற்றுவிட்டான். திடீர் பணக்காரர் ஆகும் திட்டத்தில் முழு மூச்சாய் இறங்கினான். இறுதியில், அனைத்தையும் இழந்து ஏமாந்து நின்றான்,

a)

ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்

b)

வெள்ளம் வருமுன் அணைப் போடு

c)

ஆழம் அறியாமல் காலை விடாதே

4.

“உன் நண்பர்களின் பேச்சைக் கேட்டு எந்தக் காரியத்திலும் ஈடுபட்டு விடாதே! எதையும் நன்கு ஆராய்ந்த பின்னரே முடிவெடுக்க வேண்டும்,” என்று வெளிநாடு செல்லும் தன் மகனுக்குத் திரு.மருதன் அறிவுரை கூறினார்.

a)

ஆழம் அறியாமல் காலை விடாதே

b)

ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்

c)

வெள்ளம் வருமுன் அணைப் போடு

5.

பள்ளித் தேர்வுகளுக்கு முன்பாகவே மாணவர்கள் எல்லாப் பாடங்களையும் மீள்பார்வை செய்து தங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டால் தோல்வி என்பது அவர்களை நிச்சயம் நெருங்காது.

a)

ஆழம் அறியாமல் காலை விடாதே

b)

வெள்ளம் வருமுன் அணைப் போடு

c)

ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்

6.

“இசையைக் கற்றுக் கொள்ளப் போகிறாயா? தையற்கலையைக் கற்கப் போகிறாயா, அகிலா? இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துத் திறம்படச் செய்யலாமே,” என்றார் அப்பா.

a)

ஆழம் அறியாமல் காலை விடாதே

b)

ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்

c)

வெள்ளம் வருமுன் அணைப் போடு