wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஐந்தாம் வகுப்பு - 1

Total questions: 15

Worksheet time: 30mins

Name
Class
Date
1.

பிள்ளைகள் __________ தந்த பரிசை அம்மா ஏற்றுக்கொண்டார்.

a)

அன்புக்கு

b)

அன்பின்

c)

அன்பை

d)

அன்புடன்

2.

என் __________ இந்தப் பதில் வரும் என நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

a)

நண்பனோடு

b)

நண்பனால்

c)

நண்பனிடம்

d)

நண்பனிடமிருந்து

3.

ஔவையார் தமது பாடல்கள் வழி பல அறநெறிகளை _________ எடுத்துரைத்து உள்ளார்.

a)

மக்களை

b)

மக்களுக்கு

c)

மக்களால்

d)

மக்களுடன்

4.

அம்மா __________ வந்ததும், தாம் வாங்கிய பொருள்களைக் குளிர்பதனப்பெட்டியில்

வைத்தார்.

a)

சந்தைக்கு

b)

சந்தையில்

c)

சந்தையை

d)

சந்தையிலிருந்து

5.

அன்னை திரேசா __________ வாழ்க்கையை மேம்படுத்த அயராது உழைத்தார்.

a)

ஏழைகளின்

b)

ஏழைகளை

c)

ஏழைகளில்

d)

ஏழைகளால்

6.

சிறப்பு விருந்தினர் __________ தலைமையாசிரியர் தமது உரையைத் தொடங்கினார்.

a)

அமர்ந்தால்

b)

அமர்ந்ததும்

c)

அமரும்போது

d)

அமர்ந்ததால்

7.

குழியில் விழுந்த சிறுவன், __________ வேரைப் பிடித்துக்கொண்டு மேலே வந்தான்.

a)

உறுதியான

b)

உறுதியாக

c)

உறுதியாக்க

d)

உறுதியாகும்

8.

ஆசிரியர் கூறிய கதை __________ இருந்ததால், மாணவர்கள் அதை மெய்மறந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

a)

சோகமாக

b)

மர்மமாக

c)

சுருக்கமாக

d)

சுவாரசியமாக

9.

மூதாட்டி தனக்கு நேர்ந்த பயங்கரமான திருட்டுச் சம்பவத்திலிருந்து இன்னும் __________ வரவில்லை.

a)

மீண்டு

b)

மீளாமல்

c)

மீட்டு

d)

மீறி

10.

இரு மொழிகளை __________ சிங்கப்பூரர்கள் மற்ற நாட்டினருடன் தொடர்புகொள்வதில் சிரமத்தை எதிர்நோக்குவதில்லை.

a)

கற்ற

b)

கற்றால்

c)

கற்காத

d)

கற்பித்த

11.

என் அண்டைவீட்டில் நிகழ்ந்த __________ சம்பவம் அனைவரையும் பீதி அடைய வைத்தது. காவலர்கள் இதற்குக் காரணமானவர்களைத் தேடி வருகிறார்கள்.

a)

கொல்லை

b)

கொள்ளை

12.

நேற்று பள்ளியில் நடைபெற்ற விளையாட்டுத் தினத்துக்குத் திரு மாறன் வந்திருந்தார். அவர் எங்கள் பள்ளியின் ________ தலைமையாசிரியர் ஆவார்.

a)

முன்னால்

b)

முன்னாள்

13.

உணவகத்தில் நீர் ________ சென்ற மாணவன் வழுக்கி விழுந்தான். இதைக் கண்ணுற்ற மாணவியர் சிலர் பதறியடித்துக்கொண்டு ஓடி வந்தார்கள்.

a)

அருந்த

b)

அறுந்த

14.

சுட்டெரிக்கும் வெயிலில் நடந்து வந்ததால் என் தொண்டை வறண்டு போனது. குளிர்ந்த ________ ஒன்றை வாங்கிக் குடிக்க எனக்குள் ஆசை தோன்றியது.

a)

பானம்

b)

பாணம்

15.

அம்மா மஞ்சளை _________ தம் முகத்தில் தடவிக்கொள்வார். இவ்வாறு செய்வது தோலுக்கு நன்மை பயக்கும் என அவர் சொன்னார்.

a)

இளைத்து

b)

இழைத்து