NEW
Font size
Worksheetsஅலகுத் தேர்வு (14-16)
Total questions: 20
Worksheet time: 20mins
இலக்கணத்தில் பால் எத்தனை வகைப்படும்?
5
2
4
3
'தாவும்' என்பது எக்காலத்துக்குரியது?
இறந்த காலம்
எதிர் காலம்
நிகழ் காலம்
முக்காலம்
பெயராகவும் வினையாகவும் வரும் சொல் எது?
மணி
பிணி
தணி
துணி
'குடித்தது' என்னும் சொல்லின் பிறவினைச் சொல் எது?
குடிக்கும்
குடிக்காது
குடிப்பித்தது
குடிக்கின்றது
பின்வருவனவற்றுள் தன்வினைச் சொல் எது?
காண்பித்தது
கண்டது
ஏற்றுவித்தது
இழுப்பித்தது
பின்வரும் சொல்களுள் இடைச் சொல் எது?
மிகவும்
நனி
சால
போல
யாழ்ப்பாணத்தை ஆண்ட இறுதி மன்னன் யார்?
இராசசிங்கன்
இராசேந்திரன்
சங்கிலியன்
எல்லாளன்
மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்ட இடம் ________________ ஆகும்.
கொழும்பு
காங்கேசன்துறை
யாழ்ப்பாணம்
சிலாபம்
ஒரு செயலை செய்வதற்கு முன் எத்தனை முறை எண்ணிப் பார்க்க வேண்டும்?
ஒரு முறை
சில முறை
பல முறை
எண்ணத் தேவையில்லை
துவாரமான் ஆட்சியில் "எல்லாம் நன்மைக்கே" எனக் கூறியவர் யார்?
புலவர்
அரசன்
அமைச்சர்
காவலன்
'நரி வயிறு நிறைய நீரைக் குடித்தது.' இதில் வந்துள்ள செயப்படுபொருள் எது?
நரி
வயிறு
நீரை
குடித்தது
பின்வரும் சொற்களுள் உரிச் சொல் எது?
உம்
உறு
உடை
உண்
துவரமான் எதைப் பிடிக்க விரைந்து சென்றான்?
புள்ளி மான்
புலி
நரி
அரிமா
அரசனும் அமைச்சரும் ________தோறும் வேட்டையாடச் செல்வர்.
கிளமை
கிழமை
கிலமை
கிளம்மை
கண் + நீர் =
கண்நீர்
கண்ணீர்
கண்னீர்
கந்நீர்
அரிமா என்பதன் ஒத்த சொல் எது?
புலி
மான்
சிங்கம்
குதிரை
துறக்கம் என்பதன் எதிர்ச்சொல் எது?
நரகம்
வீடுபேறு
மோட்சம்
விண்ணுலகம்
ஒரு வாக்கியத்தில் கருத்தை முடிக்கும் சொல் எது?
எழுவாய்
பயனிலை
செயப்படுபொருள்
அடைமொழி
வேறுபட்ட சொல்லை தெரிவு செய்க:
காடு
வனம்
அடவி
தோட்டம்
'கற்றூண்' என்னும் சொல்லை பிரித்தால் வருவது:
கள் + தூண்
கற் + தூண்
கல் + தூண்
கல்த் + தூண்
