NEW
Font size
Worksheetsதமிழ்மொழி ஆண்டு 5
Total questions: 15
Worksheet time: 8mins
1. கீழ்க்காணும் வாக்கியத்தில் காணப்படும் காலப்பெயரைக் குறிக்கும் சொல்லைத் தெரிவு செய்க.
கோரனி நச்சுச் தொற்றின் தாக்கம் அடுத்த வருடம் வரை நீடிக்கலாம் என உலகச் சுகாதார அமைப்பு கணித்துள்ளது.
கோரனி
வருடம்
சுகாதார அமைப்பு
உலக
காற்பந்து போட்டியாளர்கள் அனைவரும் _________ திறமையை வெளிப்படுத்தினர்.
தன்
தம்
அவர்கள்
தன்னுடைய
கோடிடப்பட்டுள்ள சொற்கள் ஏற்று வந்துள்ள வேற்றுமை உருபைத் தேர்ந்தெடுக்கவும்.
அந்தக் கைவினைப்பொருள்கள் மரத்தால் செய்யப்பட்டவை.
மூன்றாம் வேற்றுமை
நான்காம் வேற்றுமை
ஐந்தாம் வேற்றுமை
ஆறாம் வேற்றுமை
வாக்கியத்தில் கோடிடப்பட்டுள்ள சொல்லுக்கு சரியான இடத்தைத் தெரிவு செய்க.
மன்னா, என் நிலைமையைக் கூறிவிட்டேன். இனி தங்களின் தீர்ப்பு எதுவானாலும் அடியேன் ஏற்றுக்கொள்கிறேன்.
தன்மை, படர்க்கை
முன்னிலை, தன்மை,
படர்க்கை, முன்னிலை
தன்மை, முன்னிலை
கீழ்க்கண்ட செய்வினை வாக்கியத்திற்கு ஏற்ற செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெர்வு செய்க.
தெனாலி இராமனின் புத்திசாலித்தனம் அரசரைப் பெரிதும் ஈர்த்தது.
அரசரின் புத்திசாலித்தனம் தெனாலி இராமனால் பெரிதும் ஈர்க்கப்பட்டது.
அரசர் தெனாலி இராமனின் புத்திசாலித்தனத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்.
அரசர் தெனாலி இராமனைப் பெரிதும் ஈர்த்தார்.
தெனாலி இராமனின் புத்திசாலித்தனத்தை அரசர் பெரிதும் ஈர்த்தார்.
கணினியின் வருகையால் மனிதன் பல நன்மைகள் அடைந்துள்ளான். __________ தவறாகப் பயன்படுத்தினால் நமக்குத் தீமை விளைவது திண்ணம்.
ஆனால்
எனவே
இருப்பினும்
அல்லது
செய்வினை வாக்கியத்திற்குப் பொருத்தமான செயப்பாட்டு வாக்கியத்தைத் தெரிவு செய்க.
அம்மா தீபாவளிக்குச் சுவையான அணிச்சல் செய்தார்.
தீபாவளிக்கு அம்மாவால் சுவையான அணிச்சல் செய்யப்பட்டது.
அம்மாவால் தீபாவளிக்குச் சுவையான அணிச்சல் செய்யப்பட்டது.
சுவையான அணிச்சல் தீபாவளிக்கு அம்மாவால் செய்யப்பட்டது.
தீபாவளி சுவையான அணிச்சல் அம்மாவால் செய்யப்பட்டது.
ஓர் எழுவாய் பல பயனிலைகளைக் கொண்டு முடிவது?
செய்வினை வாக்கியம்
செயப்பாட்டுவினை வாக்கியம்
தனி வாக்கியம்
தொடர் வாக்கியம்
திரு கணேசன் விசாரிக்காமல் பணத்தை வியாபாரத்தில் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்தார்.
கொடுக்கப்பட்டுள்ள சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தெர்வு செய்க
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
வெள்ளம் வருமுன் அணைபோடு
புத்திமான் பலவான்
ஆழம் அறியாமல் காலை விடாதே
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
_______________________________________
எழுமையும் ஏமாப் புடைத்து
மாடல்ல மற்ற யவை
தீமை இலாத சொலல்
தீயினும் அஞ்சப் படும்
“ தேவா, கவலைப்படாதே. அக்கறையுடன் நீ பயிற்சிகளை மேற்கொண்டால் அடைய முடியாதது ஒன்றுமே இல்லை.”
மேற்காணும் கூற்றுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
வருந்தினால் வாராதது எதுவும் இல்லை
மனம் உண்டானால் மார்க்கம் உண்டு
தீட்டின மரத்திலே கூர் பார்ப்பதா?
நிறைகுடம் தளும்ப்பாது.
பணக்காரர்களுக்கானச் சிறப்பு, சுற்றியுள்ள உறவினர்களை ஆதரித்தல் ஆகும்.
மேற்கண்ட விளக்கத்திற்கு ஏற்ற வெற்றி வேற்கை யாது?
தந்த சொல் மிக்க மந்திரம் இல்லை
செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல்.
மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்
ஏவா மக்கள் மூவா மருந்து
அனைத்து செல்வங்களைவிட அழியாத செல்வமாகத் திகழ்வது கல்விச் செல்வமே.
மேற்காணும் பொருளுக்கேற்ற திருக்குறளின் இரண்டாவது அடியைத் தெர்வு செய்க.
தீயினும் அஞ்சப் படும்
ஞாலத்தின் மாணப் பெரிது
மாடல்ல மற்றை யவை
கோபங்கொண்டோர் வீட்டின் வழியே போக வேண்டாம்
மேற்கண்ட பொருளுக்கு ஏற்ற உலகநீதி யாது
மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்.
சினந்தேடி யல்லலையுந் தேட வேண்டாம்
சினந்திருந்தார் வாசல்வழிச் சேறல் வேண்டாம்
தருமத்தை யொருநாளும் மறக்க வேண்டாம்.
கோறனி தொற்றால் மக்கள் பெரும் இன்னல்களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றனர். இருப்பினும், சில தரப்பினர்கள் பொய் தகவல்களையும் வதந்திகளையும் பரப்பிக் கொண்டிருக்கின்றனர்.
இச்சூழலுக்குப் பொருந்தாத உவமைத்தொடரைத் தெரிவு செய்க.
அனலில் இட்ட மெழுகு போல
இலைமறை காய்போல
காட்டுத் தீ போல
