wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பழமொழிகள்

Total questions: 15

Worksheet time: 38mins

Name
Class
Date
1.

காட்டில் புதிதாக பிறந்த மான் குட்டி அங்கும் இங்கும் பயமறியாது துள்ளி விளையாடும். வேட்டையாட வரும் விலங்குகள் குறித்து எவ்வித அச்சமும் கொள்ளாது. இளமைத் துடிப்புள்ள இளையோர் தாங்கள் செய்யும் காரியத்தில் துணிவுடன் இறங்கிவிடுவர்.


இச்சூழலுக்கானச் சரியான பழமொழியைத் தெரிவு செய்க.

a)

ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு

b)

இளங்கன்று பயமறியாது

c)

இளமையில் கல்வி சிலையில் எழுத்து

d)

அழுத பிள்ளை பால் குடிக்கும்

2.

தவளை ஒன்று மோர் பானையில் தவறி விழுந்துவிட்டது........................................என்பது போல சற்றும் துவண்டு விடாமல் வேகமாக

நீச்சல் அடித்ததில் வெண்ணைக் கட்டி உண்டானது. வெண்ணைக் கட்டி மீது ஏறி கரைக்கு வந்தடைந்தது.

a)

அழுத பிள்ளை பால் குடிக்கும்

b)

விடாமுயற்சி வெற்றி தரும்

c)

முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்

d)

விளையும் பயிர் முளையிலே தெரியும்

3.

'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்ற பழமொழியின் பொருளை எழுதுக.

4 lines
4.

இளமைக் காலத்தில் கற்கப்படும் கல்வி சிலையில் பொறிக்கப்பட்ட எழுத்து அழியாதிருப்பதைப் போல மனதில் அழியாமல் நிலைத்திருக்கும்.

a)

ஊருடன் கூடி வாழ்

b)

சிக்கனம் சீரளிக்கும்

c)

சிறு துளி பெரு வெள்ளம்

d)

இளமையில் கல்வி சிலையில் எழுத்து

5.

'ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு'

இந்த பழமொழியின் பொருள் என்ன?

a)

அளவாகச் சினம் கொள்ளுதல்

b)

சினத்தால் நிதானத்தை இழப்பதால் எக்காரியமும் தவறாகவே போகும்

c)

ஒருவருடைய மன உணர்வை அவர் வாய்விட்டுச் சொல்லாவிட்டாலும் முகம் காட்டி விடும்.

6.

தாத்தா இளமைக் காலத்தில் வாசித்து வந்த கதைகளை இன்னும் நினைவில் வைத்துக் கொண்டு தன் பேரனிடம் கதைக் கூறினார். .................................என்பதை தாத்தா மூலம் அறிய முடிகிறது.

a)

இளமையில் கல்வி சிலையில் எழுத்து

b)

இளங்கன்று பயமறியாது

c)

முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்

d)

உப்பிட்டவரை மறந்துவிடு

7.

'அன்பான நண்பனை ஆபத்தில் அறி'

இதன் விளக்கத்தை எழுதுக.

4 lines
8.

காட்டில் புலி ஒன்று பூனைக் கூட்டத்தில் வளர்ந்து வந்ததால் தன்னுடைய இயல்பை அறியாமல் வளர்ந்து வந்தது. ....................................என்பது போல சிறு வயதிலேயே பூனைக் கூட்டத்தில் வளர்ந்து வந்ததால் பிற்காலத்தில் தன்னுடைய இயல்பை இழந்து பூனையில் இயல்பையே கொண்டிருக்கும்.

a)

விளையும் பயிரைப் பின்பு தெரியும்

b)

விளையும் பயிர் தெரியும்

c)

விளையும் பயிர் முளையிலே தெரியும்

d)

விளையும் பயிரை முளைந்த பின்பு அறிவோம்

9.

'அழுத பிள்ளை பால் குடிக்கும்' என்ற பழமொழிக்கு ஏற்ற சூழலை எழுதுக.

4 lines
10.

'ஊருடன் கூடி வாழ்' என்ற பழமொழிக்கு ஏற்ற சூழலை எழுதுக.

4 lines
11.

'ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?' என்ற பழமொழிக்கு ஏற்ற சூழலை எழுதுக.

4 lines
12.

'ஆத்திரக்காரனுக்குப்புத்தி மட்டு' என்ற பழமொழிக்கு ஏற்ற சூழலை எழுதுக.

4 lines
13.

'உப்பிட்டவரை உள்ளளவும் நினை' என்ற பழமொழிக்கு ஏற்ற சூழலை எழுதுக.

4 lines
14.

அன்பான நண்பனை ஆபத்தில் அறி' என்ற பழமொழியின் சூழலை எழுதுக.

4 lines
15.

நோயற்ற வாழ்வே குறைவற்றை செல்வம்' என்ற பழமொழியின் சூழலை எழுதுக.

4 lines